Saturday, April 29, 2017

சமையல் பாடம்

சமையல் பாடம்

அப்பாவுக்கு ஆகாது
ஆயிலும் புளியும்
ஆத்துக்காரருக்கோ..
அரை மிளகா அதிகமாகும்.
கண்ணின் மணிகளுக்கோ
கரம் மசாலா காரமுடன்
நால்வகை சமைத்த பின்னும்
நாக்கில் ருசி ஏறலையே
பிடித்தது பண்ணிபோட
பெற்றவளும் இங்கில்லை..
புரிந்தது இப்போதம்மா..நீ
பட்ட கஷ்டமெல்லாம்..

No comments: