Friday, April 14, 2017

ஹேவிளம்பி

ஹேவிளம்பி..
விளம்ப என்னப் போகிறாய்..

வெண்பா விளம்பும் வாக்கெல்லாம்
வெரும் பாவாய் விளங்கட்டும்
வளமும் நலமும் நல்கிடவே
வந்து பிறந்திடு ஹேவிளம்பி..



தனமும் இன்பமும் பெருகட்டும்
தரணியில் ஒற்றுமை ஓங்கட்டும்
துன்பம் துடைக்கும் திருக்கரமாய்
வந்து பிறந்திடு ஹேவிளம்பி





பருவ மழை பொழியட்டும்
பாயும் நதிகள் நிரம்பட்டும்
பஞ்சம் பட்டினி மறைந்திடவே
பிறந்திடு நீயும் ஹேவிளம்பி
,

குறைகள் யாவும் தீரட்டும்
குற்றங்கள் எல்லாம் குறையட்டும்
குடிசைகள் கோபுரமாய் மாறிடவே
வந்து பிறந்திடு ஹேவிளம்பி

 சுற்றமும் நட்பும் கூடட்டும்
சூழும் பகையை எதிர்க்கட்டும்
சீரும் சிறப்பும் கொணர்ந்திங்கே
வந்து பிறந்திடு ஹேவிளம்பி.
கசப்பு நினைவுகள் ஒன்றன்றி
கரும்பாய் இனிப்பாய் இருந்திடவே
கவிஞர் பலருன் புகழ்பாட
வந்து பிறந்திடு ஹேவிளம்பி

No comments: