Wednesday, May 27, 2020

Madhyamar..வா..வா வசந்தமே

#ஸண்டே_ஸ்பெஷல்
#வா_வா_வசந்தமே..

உஸ் அப்பா..தாங்கல இந்த வெய்யிலுனு..
வெளிய சுத்தியபடி..வசை பாடும் நான்..
அதே வெய்யிலை என் ஜன்னல் கம்பிகளின் வழியே ரசிக்கிறேன்..

"சத்தமில்லாத உலகம் கேட்டேன்'னு பாடினது..இப்போ இருக்கு..

ஹாரன்களும் சைரன்களும் ..புழுதியும் குப்பையும் இல்லாத தெருக்கள்..

Top floor என்பதால், சம்மரில்  கொதிக்கும் என் வீடு..இந்த முறை குளுகுளுனு இருக்கு..

 என் கிச்சனில் என்னை கைதியாக்கி, சுதந்திரமாக சுற்றும் புறாக்கள்.. இப்போது ..வைரஸ் வந்தது தெரிந்து வாழுமிடம் மாற்றியதோ என்று... தேடுகிறேன்..
கா..கா..என்று நான் கரைந்ததும்..கணத்தில் பறந்து வரும்..
அண்டங்காக்கா எங்கே என்று காக்கா பார்வை பார்க்கிறேன்..

காலிங் பெல் ஓசை..
காதில் கேட்கவில்லை..

காபி பொடி இருக்கானு உள்ளே வந்து
கதை பேசும் எதிர்த்த வீட்டு மாமியைக் காணவில்லை.

கண்ணாமூச்சி ஆடும் வாண்டுகள்..
ஆண்ட்டி..என்னை காட்டிக் கொடுத்துடாதே என்று ..கண்ணை உருட்டும் அழகுச் செல்லங்கள்..செல்லுக்குள் இப்போ..

தம்பியை அழைத்து சென்று..
தப்பாமல் பொறுக்கி எடு ' பாலை ' என்று ..
அதிகாரத்தோடு ..அன்பு காட்டும் அண்ணன்கள் அறைக்குள்ளே..

வம்பா..நானா என்று சொல்லிக் கொண்டே..
" அப்புறம் என்னதான் ஆச்சு என்று ஆவலில் கேட்கும் கிசுகிசுக்கள் மிஸ்ஸிங்..

வலது கரம் இல்லையேல் வாழ்க்கை நிற்கவில்லை..
வாங்கினது போதும்..வாகாய் உபயோகிக்கணும் என்ற உறுதி..

வேகமா வாக்கிங் போய்ட்டு..வரும் வழியில்..கோயிலுக்குள் நுழைந்து உம்மாச்சி காப்பாத்துனு சொல்லி.
.ஓரக்கண்ணால் ..இன்னிக்கு என்ன ப்ரசாதம்னு பார்க்கும் தருணங்கள்....

டெய்லர் கடைக்கு போய் ..அங்க வருபவர் கொடுக்கும் டிசைனை பராக்கு பார்க்கறது...மறந்துடுமோ?

But..
My policy is to  live the present..
So..செய்யறது அதே வேலை தான் என்றாலும்..
ஜாலியா ..ஒரு டென்ஷனில்லாமல் செய்யறேன்..

பொண்ணும், வீட்டுக்காரரும் கை கொடுக்கும்போது..அடடே..போதும் போதும் நானே செஞ்சுக்கறேன்னு சொல்லத் தோணுகிறது.( இதெல்லாம் ..முதலில் சொல்லத் தோன்றாது.).

' ஏம்ப்பா..எல்லாரும் என்னவெல்லாமோ செய்யறாளே ..மக்களுக்கு..நான் ஒண்ணுமே செய்யலையேனு எங்க வூட்டுக்காரர் கிட்ட கேட்டால்..
' நீ சும்மா வீட்டில ஒழுங்கா இரு அதுவே பெரிய உதவினு ' ஒரு போடு போட்டார்.

சரி..என்னால் என்ன முடியும்..யோசிச்சேன்..

எந்த திக்கில் இருப்பவருக்கும் போய்ச் சேரக் கூடிய ஒன்று..

அதுதான்..என்னோட prayers.

காலையும் மாலையும் இர்ண்டு மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து..chanting, slokam எல்லாம் சொல்லிக் கொண்டு..
" வந்து அவதிப்படுபவர்களுக்கு right doctor, right medicine, complete cure கிடைக்கணும் என்றும்..
இனிமேல் வராமல் காப்பாற்று என்றும் ..
வேண்டிக் கொள்கிறேன்..

No prayer goes unanswered. I believe in that.

வயதான அப்பா இருப்பதால்..வெளியூர் ப்ளான் எதுவும் எப்போதுமே கிடையாது..
So ,not missing anything.

Curfew ல் கற்றது ஏராளம்..
கடைசி வரை மறக்காது..மறக்கவும் கூடாது..

வசந்தம் வரும்..
விதிகளை மீறாமல் இருப்போம்..
வதைபடாமல் இருப்போம்.
Spring வந்தாலும்..
Social distancing தொடர்வோம்..

Make your mask ..செய்யும் வேளையில்..
Mask in inner self தூக்கி எறிய வாய்ப்பு கிடைத்தது.

இயற்கை அன்னைக்கும் கொஞ்சம் இளைப்பாறல் தேவைதானே..
இந்த வசந்த காலத்துக்காக அவளும் எத்தனை ஏங்கி இருப்பாள்?

வளர்ச்சி என்ற பெயரில்.. வதைத்தோம்..
இந்த வசந்தகாலம் அவள் எடுத்துக் கொண்ட KitKat break என்று நினைப்போம்.
அவளை மதிப்போம்.

"இனி எல்லாம் சுகமே ' இந்த ராஜா சார் பாட்டை அடிக்கடி பாடிக் கொண்டிருக்கேன்..
அம்புட்டுதேன்.

No comments: