Tuesday, August 24, 2021

கடவுள் நினைத்தான்

 கடவுள் நினைத்தான்


..நனைந்தான்..கரைந்தான்


காத்திருந்த வருணன்..பண்டிகைக்

காலத்தில் வந்தான்..

கனத்த மழை பொழிய

கனக்கும் மனமிங்கே..

காக்கும் கடவுள் கணேசனே

களிமண்ணால் ஆனாலும்

கருணைத் தெய்வம் நீயன்றோ

கரைந்தே நீ போனாலே

காயும் நாளை வயிறு பல

கொழுக்கட்டை வகையெல்லாம்

கைக்கு எட்டாமல் போனாலும்

கஞ்சியாவது கிடைக்கணுமே

கொஞ்சம் மழை நிற்கணுமே..


( என்னப்பா இவ்வளவு விலை..சின்ன பிள்ளையாருக்கே இப்படி சொன்னா எப்படி? அலை மோதும் கூட்டம்..

எல்லார் கையிலும் கூடை ,கட்டைப் பை..

திரும்பின இடமெல்லாம் பூ, பழம், எருக்க மாலை தாமரை,அல்லி..

அவர்கள் சொன்ன விலைக்கு கண்டிப்பா டிஸ்கவுண்ட் கேட்டனர்.

நமக்கோ கன்னடம் அரைகுறை..

அவர் சொல்றதை நம்ம google ல செக் பண்ணி..அதல்லப்பா..ஹத்து ரூபா..கம்மி கொடினு சொல்லி (எதோ சமாளிச்சுஃபையிங்) ஒரு பிள்ளையார் வாங்கி வந்தாச்சு..எப்போதும் மழைக்கு சந்தோஷப்படும் மனம்..இன்று ஏனோ சோகமாச்சு...இன்று மழை 'வேண்டா'த விருந்தாளியோ..)

No comments: