Wednesday, August 4, 2021

nammabengaluru

 #nammabengaluru


வந்தாள்..வந்தாள்..வர மஹாலக்ஷ்மி...


வாசலிலே கோலமிட்டு

வாழையிலே பந்தலிட்டு

வரிசையாய் பழமடுக்கி

வாசனைப் பூக்களோடு

வடையும் பாயசமும்

வகையாய் படைத்திங்கு

விளக்கேற்றி வேண்டினேன்

வரம் தரும் தேவியை

வர மஹாலக்ஷ்மி உனை

வாவெனெ அழைத்தேனே

வாட்டமெலாம் போக்கியே

வளமெல்லாம் தந்திங்கே

வாரியளிக்கும் வள்ளலாய்

வந்தெமைக்  காப்பாயே..

No comments: