Thursday, December 21, 2017

என்ன தவம் செய்தனை..2

என்ன தவம் செய்தனை..2
என்ன பண்ணிண்டுருக்க இப்போ..are you free today evening? என்னுடைய சக SPIC MACAY( Society for the Promotion of Indian Classical Music And Culture Amongst Youth) volunteer தோழியிடமிருந்து ஃபோன்..நான் இப்போ ஹனுமார் வடை பண்ணிண்டு இருக்கேன்..சாயங்காலம் சஹஸ்ரநாமம் பாராயணம்..நடுவில நவராத்திரி ஷாப்பிங்..
சரி அதெல்லாம் விடு ..என் புராணத்தை பாதியில் கட் செய்த அவள் ..தொடர்ந்தாள்.....'
நான் சொல்றவர்களை நீ டின்னருக்கு அழைச்சுண்டு போகணும் .பீடிகை போட்டாள்..யாரு சொல்லு ..எனக்கு இன்னிக்கு மண்டை பிச்சுக்கிற வேலை நிறைய இருக்குனு வெடிக்கவும்..
வேற யாருமில்ல..நம்ம dhananjayan guru ji யும் , shantha அம்மாவையும் தான்..
ஒண்ணும் சாக்கு சொல்லாம  A2B பக்கத்தில இருக்கு கூட்டிண்டு போ என்றாள்.. யேய்ய்..யாருனு சொன்னே..கையும் ஓடல காலும் ஓடல..
do it..படக்கென்று ஃபோன் வைத்து விட்டாள்.
திடீர்னு ஒரு யோசனை.
.ஆனந்த பவன் வர நேரம் என் வீட்டிலேயே விருந்து படைச்சிடலாமேனு ஒரு idea...ஆனால்.பாவம் இன்னிக்கு 2 ப்ரோகிராமுக்கு பிறகு களைத்திருந்தவர்களுக்கு வீட்டிலிரிந்து செய்து எடுத்து போய் பரிமாறிடலாம்னு முடிவாச்சு..
சுடச் சுட வெண்பொங்கல் தேங்காய் சட்னி, தயிர் ,மோரோடு , இரவுக்கு சூடான பால் சகித்கம் கிளம்பினேன் அவர்கள் இருப்பிடம்..
ரூம் கதவைத் திறந்தவர்கள்..முகம் மலர்ந்த புன்னகையுடன்..ஆசையாய் அப்படி ஒரு வரவேற்பு..
எதுக்கு இப்படி சிரமம் உனக்கு..இங்கே கிடைக்கிறதை வெச்சு டின்னர் முடிச்சிருப்போமே என்று சின்ன புலம்பல்..
ஒரு அப்பா அம்மாவின் அன்பு அங்கே கண்டேன்..எத்தனை பெரிய கலைஞர்கள்..ஒரு ஆடம்பரமில்லை..அலட்டலில்லை..தன் பெண்ணிடம் எப்படி பேசுவார்களோ அதே வாஞ்சையில் பேச்சு..
அரட்டை கச்சேரி தொடர்ந்தபடி உணவு.
உனக்கு அகிலா எங்கிறதைவிட. அன்னபூரணி ங்கற பேரு நன்னா பொருந்தும்னு மலையாளம் கலந்த தமிழில் சொன்னபோது...சிலிர்த்துப் போனேன்..
நவராத்திரி முதல் நாள் ..பாராயணம் முடித்த கையோடு.. இத்தனை பெரிய நாட்டியக் கலைஞர்களுடன் இந்த நாள் கழியும் என்று எதிரே பார்க்கவில்லை..
எடுத்துச் சென்ற தாம்பூலம் அவர்களுக்கு கொடுத்து நமஸ்கரித்தபோது..ஏற்பட்ட சந்தோஷம்...சொல்லில் விவரிக்க இயலாது..
இந்த என் நாள் மிக இனிய நாள் எனக்கு

No comments: