Thursday, December 21, 2017

காய்கறிகள் பிரமாதமா..பரிதாபமா..?

காய்கறிகள் பிரமாதமா..பரிதாபமா..?

பறிச்சு பல நாளாச்சு
பசுமையும் போயாச்சு
பல மைல் கடந்திங்கே
பட்டிணமும் வந்தாச்சு.

நடுங்கும் குளிரினிலே
கிடங்கிலே அடைஞ்சேனே
முடங்கிக் கிடந்தேனே
முறை எப்போ வருமென்று

பொரியலும் கூட்டுமாக
பயன் தரவே பொறந்தேனே
பாதி உயிர் போயாச்சு
மீதியும் போகுமுன்னே
மணப்பேனா சமையலிலே
மனமும் ஏங்குதடா.
மோட்சம் எப்போ எனகென்றே..

No comments: