Thursday, January 13, 2022

வடைமாலை

 எந்த வித agendaவும் கிடையாது..

ஆஞ்சுவுக்கு.. 

ஆசையாய் வடை மாலை கோர்க்க..

 Unconditional அன்பு கொண்டவன்..


ராம நாமம் சொல்ல..

ராப்பகல் பாராமல்..

ரோந்து செய்து எனைக் காப்பவன்..


மலை போல வருந்துயரம்..

பனி போல நீங்கணும்னு ..

மாருதியை வேண்ட..

மனக் கஷ்டமெல்லாம் போக்குபவன்..


Vada  மாலை சாத்தணும்னு நான் டேஹ்ராடூன் கோயிலில் கேட்டதை..

Bada mala என்று பண்டிட் காதில் விழ..

அமோகமா பெரிய மஞ்சள் மாலையுடன் ..

அன்று அலங்காரத்தில் ஜொலித்த ..

அந்த ஹனுமார்..கற்றுக்கச் சொன்னதுதான்..

இந்த வடை மாலை..

என்னே அவன் லீலை🙏🙏🙏


எங்கெல்லாம் ராம ஜபம் ஒலிக்கிறதோ.அங்கெல்லாம் வந்து விடுவான்..

அருளை அள்ளித் தருவான்🙏🙏🙏


No comments: