Monday, January 24, 2022

Curfew_சமையல்

 #Curfew_சமையல்..


'க' வும் "கொ'வும்..சேர்ந்த கர்ஃப்யூ சமையல்..


அது என்ன க..கொ..

கடலை மாவு..

கொத்தவரங்காய்..

அதான்..


"கொதிக்கும் எண்ணெயில் என்னைத் தவிக்க விடுவாய்..

கொஞ்சம் தயிரோடு சேர்த்து முகத்தில் பூசுவாய்..

இதற்குத்தானா நான் ஆசைப்பட்டேன்..

காயிலும்,குழம்பிலும் என்னைச் சேர்த்து ..

கரையேற்ற மாட்டாயானு 

கடலை மாவு கண்ணீரும் கம்பலையுமா..ஒரு பக்கம்..


ஏற்கனவே..நான் வத்தல் தொத்தல்..

இன்னும் எத்தனை நாளைக்கு இழுத்துண்டு இருக்கணுமோ..தெய்வமே என்று..

கொத்த"வரங்"காய்..வரம் கேட்க..


"கொத்தவரங்காய். ..அதுக்கு டிமாண்டு இல்ல..


என் மனசு ஒண்ணும் ரொம்ப கல்லு இல்லை..' 


என்று ஆறுதலாய் நான் எச பாட..


இந்த #க வும் ,#கொ வும் கைக்கோர்த்து..

கூட்டணி அமைத்து..


கொத்தவரங்காய்..இனி..

நம் குடும்பத்தில் ..

ஓர் காய்னு... ஆன நாளிது..


வித வித size ல் நறுக்க..

வெரைட்டி..guarantee..


நீளவாக்கில் கொஞ்சம்..

பொடிப் பொடியா மீதி..


#கடலைமாவு கரைச்சு விட்ட #கொத்தவரங்காய்_மோர்க்குழம்பு

#கடலைமாவு_கொத்தவரை_பொரியல்..

#கொத்தவரை தேங்காய் பொரியல் (அப்பாவுக்கு)


#மோர்க்குழம்பு


நீள வாக்கில் நறுக்கினதை..லேசா உப்பும்,சக்கரயும் ,மஞ்சளும் சேர்த்து கலந்து வைத்து..

ஒரு அரை மணி கழிச்சு..தாளிப்பில் நன்றாக fry பண்ணி ,தனியாக வைத்து விடவும். ( உங்க கிட்ட வத்தல் இருந்தால் ஓகே..ஆனால். Fresh fry இன்னும் 😋 )


இப்போ தயிரை தண்ணி விடாமல் கடைந்து..அதில் 

#ஒரு_ஸ்பூன்_கடலைமாவு, ஒன்றரை ஸ்பூன் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாகி தயிரில் கலக்கி..

பின் கடாயில் , தாளிப்பிற்கு பின் இந்தக் கலவையை தண்ணி கொஞ்சம் தாராளமா ஊற்றி கொதிக்க விடணும்..

1 டம்ளர் தயிருக்கு...ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடலாம்.

கடைசியில் ..வறுத்து வைத்து இருக்கும் கொத்தவரங்காய் அப்படியே மேலே தூவ..

கர கர மொறு மொறு ..மோர்க்குழம்பு ரெடி


#கடலைமாவு_கொத்தவரை_கறி..

எங்க பாட்டி special.

தாளித்து, வெங்காயம்  வதக்கி விட்டு,

வெந்த கொத்தவரையையும் சேர்த்து கடலை மாவை கொஞ்சம் semi solid பதத்தில் கரைத்து வைத்து..

அப்படியே அந்த காயில் சேர்த்து நன்றாக கலப்பாள்..


ஆஹா..கொத்தவரையும் கடலை மாவும்..


"நீயும் நானும் இன்று

 கைகள் கோர்த்துக் கொண்டுனு" டூயட் பாடிண்டே..

"வாழ்வின் எல்லைக்கே' நம்மை கொண்டு போகுமாக்கும்.


#தேங்காய் போட்ட பொரியல் எப்போதும் போல..


பருப்பு உசிலி பண்ணலாம்..பக்கோடா பண்ணலாம்..பொரித்த கூட்டு பண்ணலாம்..புளியிட்ட கூட்டு பண்ணலாம்

புளிக்குழம்பில் போடலாம்..இன்னும் இன்னும்..


எது செய்தாலும் இப்போ கொண்டா கொண்டானு சாப்பிடும் நேரம்.

இது தான் சமயம் நமக்கு..

Fast food லேர்ந்து மீண்டு..

நம் பாரம்பரிய feast food க்கு 

நம் குடும்பத்தினரை கூட்டிச் செல்வோம்..


Curfew ஒன்றே..

Cuisine ம் ஒன்றே..


"


No comments: