Monday, January 24, 2022

ஆஹா..காந்தி மகான்..

 Thanks Shiv K Kumar Sir..


 எச to Your morning post

ஆஹா..காந்தி மகான்..


அஹிம்சை எல்லாம்

இம்சை என்றோம்..

non violence என்பதை

'நான் violent 'என்றோம்..

சாந்தி என்ற சொல்லே

சங்கடமென நினைத்தோம்


தூளி ஆட்டி ..

தாலாட்டுப் பாடி

தட்டிக் கொடுத்தோம்..

தூங்கட்டுமே ..

உண்மையென்றோம்..


பொய் பேச

கூச மாட்டோம்..


காந்தி ஜயந்தியன்று

காந்தி புகழ் பாடுவோம்..

ஆஹா.

காந்தி மகான் என்போம்..


காகத்தின் உறைவிடமாம்

காந்தி சிலையெல்லாம்..

காணுமே புதுப் பொலிவு..

கலர் கலர் மாலையிலே


தேடாதே..சிலை ஓடி..

தோண்டி எடு ..உன்னுள்ளே

தூங்கிக் கிடக்கும் 

காந்தி மகானை..

No comments: