Wednesday, March 15, 2017

காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு..
'கார் 'அடைய சிலருக்கு
கால்வயிறு கஞ்சிக்கு..பலருக்கு

கடமை பலவுண்டு
காக்கணும் பெத்தவரை
கல்யாணங் கழிக்கணும்
காலாகாலத்தில் தமக்கைக்கு
கண் கலங்காம பாத்துக்கணும்
கரம் பிடித்து வந்தவளை
கல்வி தரணும்..
கண்ணான பிள்ளைக்கு
 கடமை நிமித்தம் அவன்செல்ல
கட்டியவள் கட்டிக்காப்பாள் வீட்டையுமே
அகமுடையானை அனுப்பிவிட்டு
அவளொன்றும் சுகமா இல்லையிங்கே

ஆதியும் அந்தமும்
அவள் பொறுப்பு
பின்னூசி முதல் பீரங்கி வரை
புருஷன் காதில் படாம
பிரச்சனைகள் முடிப்பாள் பொறுப்பாக.

அல்லாடி அலைந்தாலும்
ஆல் ஓகே என்பாளே
பிரிவு தனிமை இருந்தாலும்
சரிவு வராது காப்பாளே
சரடு கட்டி நோற்பாள் நோன்பு..
சிரிப்பவர்கள்..சிரிக்கட்டும்..
அது ஆணவச் சிரிப்பென்று..

No comments: