Friday, March 24, 2017

Holi hai holi

holi hai holi..
கத்தலோடும் கலரோடும்
காலை ..புலரும்..
வயதுக்கும் வாலிபம் திரும்பும்
வசந்த நாள்.. இன்று

வண்ணங்கள் வாங்கும் விழா
வாரங்களுக்கு முன்பே தொடங்கும்..
உற்சாகம் உல்லாசம்..
ஊரெல்லாம் கொண்டாட்டம்..

உருளை உருண்டு விளையாடும்..
உருவம் பல எடுக்கும்..
வடாமாய்,சிப்ஸாய்,டிக்கியாய்..
போண்டாவாய்,கட்லட்டாய்....
தோழியுடன் ஒப்பந்தம்..
தோசை சாம்பார் கொண்டு வரேன்..
தோதாய் நீ வேலை செய் என்று..(நமக்கு இதெல்லாம் வராதே..சாம்பாரைப் பார்த்ததும் 'shakthimaan' ஆகிடுவா..!!)
அடுத்து..
'குஜியா'... செய்யனும்..'
தோழி சொல்ல..
நதியா மட்டுமே தெரிந்த நான்
திரு திரு நு முழிக்க...
சிரிப்பு தான்..சந்தோஷந் தான்..
செய்யறதுக்குள்ள.. சீவன் பாதி போகும்..
ஆனா..
சொர்க்கம் தெரியும்..சொட்டு நாக்கில பட்டதும்..
சுவையோ ...சுவை....
ருசியோ ...ருசி..

ஹோலி நாள்....
ஒரு ஜாலி நாள்...

பாலிகை கரைக்கறது மறக்காம இருக்க.
பாக்கெட் கலரெல்லாம் தண்ணீரில் கரைச்சு
பக்கெட் டிலும்..பலூனிலும்..
pichkari யிலும் ...ரொப்பித் தள்ள
வாரி இறைத்த வண்ணங்கள்..
வானவில் ஜாலம் காட்ட..

ஒரு வழியாய் ஆடி முடித்து..
அப்பிய கலர் போக..
அட்டகாச குளியல் போட்டு.
அப்பாடா...தூக்கம் போட்டு..
என்னமா..ஒரு பண்டிகை...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..
இன்றோ..
no 'holi'day நு school சொல்ல..
நொந்துமே என் பெண்ணும் சென்றுவிட..
நினைவுகளை அசை போட்டு....
ஜோலி ஒன்றும் இல்லா..
காலி ஹோலி..
happy holi my dear friends
enjoy every minute of life..
moments never come back ..
only the memories stay back..

No comments: