Wednesday, March 22, 2017

தண்ணீர் தண்ணீர்

தண்ணீர்..தண்ணீர்
ஒரு கப் சக்கரையும் காப்பி பொடியும் கடன் வாங்கும் காலம் போய் ஒரு கப் தண்ணீ இருக்கா..அடுத்த மாசம் திருப்பித் தரேந் மாமி எனலாம்..
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா..அவள் ஆத்துக்காரர் அரை லிட்டர் தண்ணீ வாங்கிண்டு வந்ததை கேட்டேளா..
பட்டு மாமி பொறாமையில் மூக்கை சிந்தலாம்..
அப்பா..அப்பா..ஏன் எனக்கு தண்ணிகாசலம் னு பேர் வெச்ச..என் friends எல்லாம் கேலி பண்றாப்பா..என்று அடம்பிடிக்கும் மகனிடம்..அது மூதாதையர் பேருடானு சொல்லலாம்..
Demonetization சமயத்தில் ஒரே ஒரு 500 ரூபாயும் ,ஆயிரம் ரூபாயும் தனியா எடுத்து உண்டியல் அடியில் போட்டு  வெச்சு காண்பிச்சோமே..இந்த தண்ணீரை இவங்களுக்கு எப்படி இருக்கும்னு காட்ட எடுத்து வெச்சிருக்கலாமோனு வருந்தலாம்.
கண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பல உருவாகலாம்..அதிகம் அழுவோர்க்கு மானியம் தரப்படலாம்.
திரவப்பொருளில் தண்ணீர் என்றதும் திருதிருனு முழிக்கலாம்..
நிலத்தடி நீர் தேடப்போனவர்கள் ..நிலத்தடி அபார்ட்மெண்ட்டுகள் கட்டலாம்..
அங்கேயே IT companies ஆரம்பிச்சு..பல மூர்த்திகள் முன்னுக்கு வரலாம்.
Education loan,home loan எல்லாம் போய் water loan வாங்கி அதுக்கு emi கட்டலாம்
கோடை விடுமுறைக்கு தண்ணீர் கிடைக்கும் mars க்கு சுற்றுலாப் பயணம் போகலாம்..
ஐயோ ..
நினைக்கவே நடுங்குதே..
நீயில்லாமல் நானா
நீரில்லாமல் வாழ்வா..?

நிறமில்லா நீர்..
நதியாய்..ஆறாய்
நானிலம் காக்க
சுயநல வாழ்வில்
கயவராய் மாறினோம்
தண்ணீர் தானே...
தாராளமாய்..
தண்ணீராய் செலவு..

விளைவோ..

ஒரு குடம் நீருக்கு
ஒரு மணி காத்திருப்பு

தவிக்கும் வாய்க்கு
தண்ணீர் தரவே
தயக்கமும்  ஆச்சு.

சேமித்த காசு..நீர்
சேந்தித் தரல..
சிந்திய துளிகளும்
சேர்க்க முடியல..

கங்கையும் யமுனையும்
காவிரியும் நர்மதையும்
கைக் கோர்க்கட்டும்..
கண்ணீர் துடைக்கட்டும்

நதியெல்லாம் இணையட்டும்..
நலமெல்லாம் பெருகட்டும்..
நாளை வரும் சந்ததிக்கு
நம்மால் முடிந்த உதவி..
நல்லக் குடிநீரும்
நோயில்லா வாழ்வு

No comments: