Thursday, March 9, 2017

பரீட்சைக்கு நேரமாச்சு..English English 12 th

பலநாளாய்க் காத்திருந்த
பன்னிரெண்டாம் வகுப்பு
பரீட்சை தொடங்கியது
பரீட்சை தொடங்கியது.

ஆங்கிலப் பாடம் இன்று
ஆரம்பம் எளிதில் இருந்து

இலக்கணமும் இலக்கியமும்
இயல்பாக அழகாக
இன்பமாய்ப் படித்தாலே
ஈர்க்குமே காந்தமென..

பத்திகள் பல உண்டு
பக்குவமாய் பதில்கொடு
கடிதங்கள் வகையுண்டு
கருத்தோடு எழுதிடு நீ
குறுஞ்செய்தி மொழியினையே
மறந்திடு நீ அங்கேயும்.

படைப்பாற்றல் சோதிக்க
பாகமொன்று உண்டங்கே
கட்டுக்கதை எழுதாமல்
கட்டுரையை எழுதிடு நீ
பிட்டுபிட்டு வைத்திடு நீ
புரட்சியான சிந்தனையை

எட்டிக்காய் இல்லையது
எகிறியுமே நீ ஓடாதே
கிட்டுமே  மதிப்பெண்ணும்
நாட்டமுடன் எழுதிடு நீ

விடை தெரியா
வினாக்கள் சில
வந்திடுமே சோதிக்க
விதியென எண்ணாது
மதியால் வென்றிடடி..

வேறென்ன  சொல்ல
வெற்றி உன் வாசல் வர
வாழ்த்துக் கவியிதுவே
வாழ்த்தும் கவியிது..

No comments: