Tuesday, March 21, 2017

நீயில்லையேல் ..நானில்லையே...

நீயில்லையேல் ..நானில்லையே..


கழுதைக்குத்தெரியுமா
கற்பூர வாசனை ..
கர்வமான  கருத்தோடு
கனலாய்க் கக்கியிருந்தால்
கவிதை ஒரு வதையென்றே
காத தூரம் ஒடியிருப்பேன்..

இலக்கணம் எனும்
இடுக்கியில் சிக்காதே
மரபு எனும்..
வரம்புக்குள் மாட்டாதே..
வெண்பா வரலையென்று
வெறுமே இருக்காதே..
தேமா புளிமா தடுமாறாதே
தெம்பு தரும் கவி எழுது
ஒற்று தப்பினால் என்ன
கற்றுக் கொள் நீயே
விருத்தம் வரலையென
வருத்தம் கொள்ளாதே..

கொச்சகக் கலிப்பா
மெச்சும்படி வராதா என
மருகாதே நீயும்

சீரும் அடியும்
சிறப்பாய் வருமே
சிறு முயற்சி செய்தாலே
எதுகையும் மோனையும்
என்றும் உனதாகுமே
எண்ணத்தில் தெளிவிருந்தால்..

ஊக்குவித்தவள்..
உலகம் வேறில் இன்று..

கவிதை நாள் இன்று..
காணிக்கை இதுவே உனக்கு..
தங்கமணி..
எங்கே நீ..

No comments: