Wednesday, March 8, 2017

வீடும் நாடும்

பரீட்சை க் காய்ச்சல்..
பரவி இருக்கே..
வீட்டிலும் நாட்டிலும்..

பலப் பரீட்சை
படிப்பிலும்..
பொது வாழ்விலும்..


படித்தது நினைவிலிருக்க வேண்டுதல்...வீட்டில்
படிக்கத் தெரியனுமேனு வேண்டுதல்.நாட்டில்

பாதாமும் பழரசமும் பலத்தைக் கூட்ட..வீட்டில்
பாட்டிகலும் ஊறுகாயும் பலவீனப்படுத்த..நாட்டில்

பொழுது விடியலும் சாய்தலும் அறியா ..வீட்டில்
பொழுதே போகாத அடைப்பு..நாட்டில்

விரயம் நேரமென்றே துண்டித்த இணைப்புகள்..வீட்டில்
விவரம் தெரிந்திடுமேனு துண்டித்த இணைப்புகள்..நாட்டில்

தலையைத் தடவி ஆதரவு.. வீட்டில்
தர்ம அடி நகர்ந்தாயோ..நாட்டில்

அமைதியும் அரவணைப்பும் பெருகும்..வீட்டில்
அராஜகமும்,அடியாளும் பெருகுது..நாட்டில்

தீயா வேலை செய்யணும் குமாரு..வீட்டில்
தீவில் நீ அடைஞ்சிடனும் குமாரு.நாட்டில்

வேகம் குறைய் விவேகம் கூட
வெற்றி நிச்சயம் கிட்டிடுமே
விதியிதை மறந்தால்
வீடும் நாடும் சிதைந்திடுமே..

No comments: