Monday, March 13, 2017

Holi hai holi

ஹோலி நாளடி இன்று
ஜோலியும் ஏதடி வேறு..
கால நேரம் மறந்ததடி
கவர்ந்ததடி களிப்பாட்டம்

வண்ணம் பல வாரியிறைத்த
வட்ட முகங்க ளிடையே
வஞ்சி உனை காணலையே
எஞ்சிய தெனக்கு ஏமாற்றமே..

அப்பிய வண்ணத்திடையே..உன்
அழகு முகம் மறைந்ததடி
அடையாளம் அழிந்ததடி
ஆகாதடி இந்தக் கோபம்
அப்பிராணி நானடி..

தோப்புக்கரணம் போடவா
தோளில் உன்னை சுமக்கவா
ஆத்து நீரை அள்ளவா..உன்
அகம் வரையில் துணைவரவா

கெஞ்சி மன்றாடி நிற்பேன்
வஞ்சி எனை நம்படி
வஞ்சகனும் நானல்லடி..உன்
விழியின் கனலும் தள்ளடி

No comments: