Wednesday, March 15, 2017

கூந்தலிலே மேகம்

எப்படி manage பண்ற..இத்தன நீள முடியை..
என்ன ஷாம்பூவில் ஆரம்பித்து என்ன எண்ணெய்..என்ன மாதிரி சீப்பு..எண்ணைக் குளியலுண்டா..
என்ன டயட்..
எப்படி தலை வாரல்..முடியை தூக்கி போடுவியா..இல்ல சவுரி பண்ண குடுப்பியா..காதில் புகையுடன் கேள்விக் கணைகள்..
கூந்தலுள்ள சீமாட்டியோ..அதெல்லாம் ஒன்னுமே இல்ல..இயற்கையிலேயே அப்படித்தான் என்று ஒரு அலட்டு
அலட்டுவா..
கண்ணன் பார்த்தார்..எங்கே இந்த வலையில நம்ம ராதையும் சிக்கிடுவாளோனு ஒரு கலக்கம்..
அவர் அட்வைஸ் ராதைக்கு என் கற்பனையில்..
பிழை பொறுத்தருள்க


கொண்டையும் நீ முடியடி
கண்டவர் கண் படுமுன்னே
பொறாமையில் பொசுங்குவாரடி..
போதும் உன்னலட்டல் என்பாரடி
போடி அசடுன்னும் சொல்வாராடி
பாப் கட் உனக்கு எடுப்பென்பாரடி
செம்பருத்தியும் சீயக்காயும்..
சேர்த்து வைத்த ரோஜாவும்
வாசனை திரவியமெல்லாம்.
வேண்டாமே இப்போ என்பாரடி..

ஷாம்பு போதுமென்பாரடி
சரமாகும் உன் கூந்தலென்று
சொல்லி வீழ்த்துவாரடி
சாயாதே வீசும் மாயவலையில்
மாயக் கண்ணன் எனை
மயக்கும் உன் கூந்தலடி
விரித்தாலும் அழகு..
முடிந்தாலும் அழகு..
ஒரு முழமும் சூடலாம்..
ஒற்றை ரோஜாவும் சொருகலாம்.
உன்னழகைக் கூட்டுமிந்த
கருங்கூந்தலதை..கழிக்காதேடி
ராதே..என் ராதே

No comments: