Friday, March 3, 2017

காத்திருத்திருப்பு

காத்திருத்திருப்பு
உருவான கரு உலகுகாண இன்பக் காத்திருப்பு
உள்ளங்கையில் ஏந்தி ஊர்வலம் வர காத்திருப்ப்பு
உதைக்கும்  பிஞ்சுக் காலை
பிடித்துக் கொஞ்சக் காத்திரிப்பு
ஊட்டி விடுகையிலே ஊர்க்கதை பல  சொல்லக் காத்திரிப்பு
கொஞ்சும் மழலையில் கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவரக் காத்திருப்பு
 கைப் பிடித்து நீ நடக்கையிலே காலடியில் பூமி நழுவக் காத்திருப்பு
பள்ளியின் முதல் நாள் பாதியிலே
முடியாதா என பரிதவிப்பு காத்திரிப்பு

விடுதியில் விட்டதும் வெறிச்சோடிய வீடு ..வெளிச்சத்துக்கு காத்திருப்பு
படிப்பு பாரத்தின் இடையிலே
பேசவும்  வாராயோனு  காத்திருப்பு
பேசும் குரலில் துன்பமில்லாத் துள்ளல் இருக்கக் காத்திருப்பு.
பணி பளுவிலும் பண்றே என்னனு
பூங்கொத்து செய்திக்கு காத்திருப்பு

களைப்புத் தராக் காத்திருப்பு
கண்மணி அவளுக்கான காத்திருப்பு

ஊர் சொல்லும் உலகமெல்லாம்
உன்னை விடப் பெரிதா ..இல்லை..
உலகம் நீ சுற்றினாலும்..என்
உலகம்  என்றும் நீதானே..

பயணங்கள் ..
புதுப் பாடங்கள்..
பதியணும் மனதில்.
புகைப்படமாய் என்றும்..

No comments: