Sunday, March 19, 2017

நெருடும் நிஜம்

கொளுத்தறது வெய்யில்
குளுகுளு பிரதேசத்துக்கு
குடும்பத்தோட போறேன்..
கொஞ்ச நாள் தப்பிக்க..
நீயெங்கே வரமுடியும்
நீட்டிப் படுத்துடுவியே..
நானும் இவளும்
நண்டும் சிண்டோட
நாளைக்கு கிளம்பணும்..
நீ வேணா..
நாலு மனுஷாளோட
நாளைக் கழிக்கிறயா..
நல்ல பொழுதும் போகும்
நான் வரும் வரைக்கும்..

நனைத்த நார்ப்புடவை
படுக்கையாய் விரித்தபடி
புன்னகைப் பார்வையுடம்
 போய்ட்டு வா நீ
 பார்த்துக்கறேன் நானென்றாள்

ஒத்திகை அத்தனையும்
ஒரு தூசானது..அவள்..
ஒற்றை வார்த்தையில்..
அம்மானா..
சும்மாவா..

No comments: