Tuesday, March 21, 2017

என்ன வெய்யில்..

என்ன வெய்யில்..
என்ன வெய்யில்..
வருஷா வருஷம்
வரும் புலம்பல்..
ஆனாலும் ..
காத்திருக்கோம்...
கரு வடாமும்
வடு மாங்காயும்
கடைந்த  மோரும்
கவளம் சோறும்..

நுங்கும் இளநீர் வழுக்கையும்
தர்பூஸ் கிர்ணி முலாமுங்கூட
மல்கோவாவும் இமாமபசந்தும்
மலையாய்க் குவியும் ..
மனமோடு உடலும்் குளிரும்..
பத்து காசு பாலைஸ் சுவை
butterscotch இல் இல்லையே
எல்லாக் காலமும்
எல்லாம் கிடைப்பதால்
எள்ளளவும் தெரியலை யே
எல்லாவற்றின் அருமையுமே..

No comments: