Thursday, March 9, 2017

ராதே..என் ராதே

ராதே..என் ராதே

இறக்கடி உன் கோபத்தை
இறகாக்கடி உன் மனத்தை

போகும் பொழுதும் தெரியலையே
பேதையுன் மொழிப் போதையிலே
போதுமென்ற மனமும் இல்லையே
போகா விடில் விழும் பழியே..

காத்திருப்பர் கோபியர் அங்கே
கண்கட்டி விளையாட்டும் ஆட
கொஞ்ச நேரம் போகவேணும்
கோபமேனோ சகியே உயிரே...

காதலன் மட்டுமல்லடி உன்கண்ணன்
காவலனாய் என்றும் காக்கும்
கடமை ஒன்றும் உள்ளதே
களங்கம் வரலாமோடி
கண்ணன் உன் மன்னனுக்கு..

கனல் பார்வை நீ விட்டு
கனிவோடு வழி அனுப்பு
காத்திருப்பும் சுகமென
கண்டறி நீ கண்மணியே..

No comments: