Thursday, March 9, 2017

கண்ணன்

பார்வை ஒன்று போதுமடி
பாரம் யாவும் தீருமடி

பகலும் இரவும் போனதடி
பாவை உந்தன் பிணைப்பினிலே

மையிட்ட உனது கருவிழியோ
மையல் கொள்ளச் செய்யுதடி

மணிகள் கோர்த்த மாலையுமே
மங்கையுன் அழகை உயர்த்துதடி

சிவந்த உந்தன் திருமுகமோ
சீவனை கொல்லத் துணியுதடி

சிரிப்பில் மயக்கும் உன்னிதழோ
கிறக்கத்தில் என்னை வீழ்த்துதடி..

மாயக்கண்ணன் நானென்றால் எனை
மயக்கும் மகராசி நீயன்றோ..

மாலை மயங்கத் தொடங்குதடி
மறுபடி வருவேன் நாளையுமே
மலர்ந்து நீயும் விடைகொடடி
மருகாதே எந்தன் மான்விழியே..

No comments: