Thursday, June 3, 2021

மத்யமர்_என்_பார்வையில்

 #மத்யமர்_என்_பார்வையில்..


Www.Facebook.com/groups/Madhyamar


கி.மு , கி.பி....எல்லாருக்கும் தெரிஞ்சது தானே..

இப்போ நான் ஒண்ணு சொல்லப் போறேன். கவனமாப் படியுங்க.


முகநூலில் என் பயணத்தை நான் 

"ம.மு,  "ம .பி  னு  பிரிச்சுட்டேன் .


அது என்ன 'ம'..?

அதாங்க.. " ம" for மத்யமர்.

so..மத்யமருக்கு முன் ..மத்யமருக்கு பின். 


the talk of Facebook. the new face of facebook.

மத்யமர் ..சரிதானே?


குரூப்னு சொன்னாலே குதிச்சு ஓடிய நான்..இப்போ ஒரு மாபெரும் குரூப்பில் ஒரு அங்கமாக..

அப்படி என்ன வேறெங்கிலும் இல்லாதது இந்த மத்யமர்ல இருக்குனு கேக்கறீங்களா?


* மிகப் பொறுப்புடன் வரம்பு மீறாத பதிவுகள்.

எத்தனை எழுத்துச் சிற்பிகள் இங்கே.


* ஆஹா ..எனக்கு ஏன் தோன்றவில்லை என வியக்க வைக்கும் பதிவுகள்.


* திசை எட்டிலிருந்து தெறிக்கும் சிந்தனை தூண்டும் பதிவுகள்.


* செய்திகளாய் சொல்லும் விஷயங்கள்

சேமிக்கத் தோன்றும் பொக்கிஷங்கள்.


*ஒரே ஒரு தளம். எழுத்துக்களின் களம். போர்க்களம் இல்லை. bore கொஞ்சம்கூட அடிக்காத தளம்.


* home away from home மாதிரி இங்கே ஒரு extended family atmosphere. 


வெறும் பதிவுகள் தானானு..வேற என்ன ஸ்பெஷல் இங்கேனு கேட்கிறீங்களா?


உங்க யாருக்காவது திங்கட்கிழமை பிடிக்குமா?..

a big no தானே?

but madhyamar is a group with a difference. 

மண்டே ஸ்பெஷல் இங்குண்டு. சூப்பர்

் தலைப்புகள் தரப்படும். அதில் எல்லாரும் தாங்கள் கற்றதும் ,பெற்றதும், அனுபவமும் எழுதி பட்டையை கிளப்புவாங்க..


'வெளிச்சம் ' என்று ஒரு நேர்காணல் நிகழ்ச்சி.

மாதம் ஒரு முறை நடக்கும். 

குழுமத்தில் உள்ள experts in field அழகா நம்ம கேள்விக்கு தெளிவா பதில் சொல்லி நமக்கு இருக்கும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறாங்க.


post of the week ..போட்டி போடுவோம் என்ன நல்ல topic எழுதலாம் என்று. ஒரு healthy competition . ஒன்றை ஒன்று மிஞ்சும் எண்ணக் குவியல்கள்.

இங்கே எனக்கு முதல் முதலா post of the week கிடைச்சப்போ , சின்ன குழந்தை ஸ்டார் வாங்கிண்டு வந்து அம்மாக்கிட்ட காண்பிக்கும் போது ஒரு சந்தோஷப்படுமே..அப்படி குஷியாகி இருக்கேன்.


கவிதையென்ன, கார்ட்டூனென்ன,காரசார விவாதம் என்ன...dhool கிளப்பும் இடம்..தளம்.


லைக்கும் கமெண்ட்டும் ஒரு பக்கம் இருந்தாலும்.. like minded people இந்த முகநூல் சமுத்திரத்தில் கிடைத்த திருப்தி.


ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்து ஒரே குடும்பம் போல ,அவரவர் தனித் தன்மையும் இழக்காமல், ஒரு பாதுகாப்பான இடமாக ஒருமித்த கருத்துடன் , பதிவுகள் மட்டுமன்றி பல புதிய பாதையும் நோக்கிச் செல்லும் மத்யமரில் நானும் ஒருத்தி என்று நினைக்க சந்தோஷம் ஊற்றாகிறது.


நிதானத்துடன் செல்வதால் நிச்சயம் பல மைல்கல் கடக்கும்..

முகநூலில் ஒரு புது முத்திரை படைக்கும் இந்த மத்யமர் என்பதில் துளி சந்தேகமில்லை.


'இன்னிக்கு மத்யமர்ல என்ன விசேஷம்னு' என்னை பார்க்கும் எல்லாரும் கேட்கும் அளவுக்கு பிரபலம் . அதிலும் இதில் வரும் நல்ல பயனுள்ள செய்திகள் குழந்தைகளுடன் பகிர முடிகிறது. 


அரசியல், அறிவியல்,ஆன்மீகம், இசை, சமையல், சமுதாய விழிப்புணர்வு, நாட்டு நடப்பு ...இதில் இடம்பெறாத செய்திகளே இல்லை.


என்னைப்போல இன்னும் 11000 முகனூல் மக்களுக்கு மத்யமர் இப்போ  " life line".


The 3 C's of Madhyamar... The  captain, the  crew and the Comrades.. ஒற்றுமையோடு ஒரு புது இயக்கமாக உருவாக்க ஒரு பயணம்.


கடலின் கொந்தளிப்பும் , அலைகளின் வேகமும்.. அசைக்க முடியாது சீரான ஓட்டத்துடன் செல்லும் இந்த மத்யமர் கப்பலை.


"எங்கெங்கு காணிணும் மத்யமரடா " என்று பாடும் நாள் வெகு தூரமில்லை..

proud to be a part of madhyamar.

No comments: