Thursday, June 17, 2021

Madhyamar-ஓர்_உயிரின்_வரவு

 #ஊரடங்கில் 

#ஓர்_உயிரின்_வரவு..


காலையில் ..

பால் எடுக்க கதவைத் திறந்தால்..

பட்டது என் முட்டைக் ( சோடா பாட்டில்) கண்ணில்..

பட்டுப்போன மரத்தின் அடியில்..

முட்டையொன்று..அழகாய்..


இப்போ வருவோம் கதைக்கு..


என் எதிர் வீட்டு அம்மணி..

மெத்தப் படித்தவங்க..மேல்நாடு சென்றவங்க..

பறவை க்ளப்பு, பட்டாம் பூச்சி க்ளப்பு..எல்லாத்திலும் active மெம்பருங்க..

பாதி நாள் சுற்றுப் பயணம்..வெளிநாட்டு

சுற்றுலா பயணிகளுக்கு ..நம்மூர் பூச்சி பொட்டு காண்பிக்க..


அபார்ட்மெண்ட் அரை அடி அறையில்

ஆலமரம் வளர்க்க ஆசையுண்டு..


வீட்டுக்குள் வெளிச்சம் இல்லையென்று..

வராண்டாவில் கொண்டு வந்து வைத்தார்..

வளர்ந்த மரமொன்றை....சிறையாய்..

சின்னத் தொட்டியிலே..

வாசம் செய்தன பூச்சிகள் அதன்..இலைகளில்..

 


குட்டி வாண்டுகள் அதை தொட முயலும்

கிளைகளோ..முறையின்றி வளரும்

கண்ணைக் குத்த ரெடியாக இருக்கும்..

கவனிப்பார் யாருமின்றி..கலங்கிக் கிடக்கும்.


Garden ல் வையுங்களேன்னு சொன்னால்..

கர்வமாய் ஒரு பார்வை.

என் மரம்..நான் எங்க வேண்டுமானாலும் வைப்பேன்னு பதில்..


காய்ந்து போகிறதே ..தண்ணி விடட்டுமானு கேட்டால்..

உங்க தண்ணி காட்டற வேலையெல்லாம் இங்கே வேணாம்னு ஒரு லுக்கு..


கர்ஃப்யூ வந்தப்பறம்..பொண்ணு வீட்டிலேயே இப்போ வாசம்.

கவனிக்க ஆளில்லாமல்..அந்த மரம்..


பேசுவேன் மரத்துடன்..உரம் கொடுப்பேன் வார்த்தையில்..


"போட்டு உடைக்கவா உன்னிடம் ..மனதில்

பொத்தி வைத்த பாரத்தை...

பேச ஆரம்பித்தது..அம்மரம்..


"இலையெல்லாம் உதிர்ந்து போய்

இருக்கேன் எதற்கு இங்கே?

இருக்கும் தொட்டிக்குள்ளேயே..என்

இறுதிப் பயணம் நடக்கட்டுமென்று..

இருளில் இருக்குமெனக்கு ..விடிவேது? என்றது.


"உன் பிறப்புக்கும் ஒரு அர்த்தம் உண்டு..

உணர்வாய் நீயும்  ஒருநாள்..என்

உள்ளுணர்வு சொல்கிறது..

உறுதியாய் இரு 'என்றேன்.


அதிசயம்..நடந்தது..


அடைக்கலம் கேட்டு வந்தது..

அந்த ஜோடிப் புறாக்கள்..

அன்பிலே ஒரு கூடமைத்து.

அமைதியாய் வாழ்ந்தது..


பெண்புறாவின் பிரசவ வேளை..

பறந்து பறந்து அலைந்தது ஆண்புறா..

வேளை வந்தது..

வெளியே வந்தது..வெண்முட்டை ஒன்று..


ஆசையாய்..பார்த்தோம் ..

நானும்..மகளும்..

அம்மா..அப்பா..அன்பு..

அனைவருக்கும் ஒன்றுதான் என்று.


"அம்மா..கதவை சத்தமா திறக்காதே "..என்று பொண்ணு..ஆர்டர்.

அடை காக்க..அம்மா புறா அந்த காய்ந்த 🌲மரத்தொட்டியில் அமர்ந்திருக்க..


" யாருக்கும் பயனில்லாமல்..அழிந்தே போகுமுன்.. தொட்டியிலே..உருவாச்சே..

குட்டி உலகம் ஒன்று '

அந்த..பெயர் (எனக்கு) தெரியாத மரம்..

கடைசியில்.. 

பாடம் புகட்டியதோ எனக்கு?


Everyone has a wonderful mission in life. And everyone comes to your life for a reason.


அன்பு சூழ் உலகு..ஒவ்வொரு 

"அடி'யிலும் ..உணர்த்தும் அவன் செயல்..

No comments: