Thursday, June 17, 2021

Madhyamar-ஆன்மீகம்

 #ஆன்மீகம்

(மிக தாமதமாக பதிகிறேன். ஆனால் மனதில் உள்ளதை மத்யமர் நண்பர்களிடம் சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?)


பூஜையெல்லாம் உண்டா உன் வீட்ல? நீ Buddhism க்கு மாறிவிட்டயாமே? இப்படி ஒரு சிலர்.Buddhism follow பண்றேன்னு சொல்ற..எங்கே வீட்டில் ஒரு புத்தர் படமும் காணோமே?.


இளக்காரத்தின் உச்சத்தில் பலர்..

இருக்காதா பின்னே? கேட்டவருக்கு சொல்கிறேன்..என்னிடமும் இருக்கு..உன்னிடமும் இருக்கு அந்த்க Buddha nature. அதைத்தான் நான் காண்கிறேன் என்பேன்.


பிள்ளையாரோடு பேச்சு வார்த்தை நடத்தி காரியம் சாதிக்கும் அம்மா..

அருகம்புல் வைத்து அனுதினமும் பூஜை செய்வாள்.

அம்பாளின் பூரண அனுக்கிரஹம் பெற்றவள்..

அப்படிப்பட்டவளின் பெண்ணாகிய நான்..ஜப்பானிய மொழியில் ஒரு மந்திரம் chant செய்ய ஆரம்பித்தபோது அதிர்ந்தாள்.


இது என்ன நம்ம குடும்பத்தில் இல்லாத ஒரு நம்பிக்கை திடீர்னு உனக்கு எப்படி? தெய்வ குத்தம் ஆகிடும்..எனக்கு பயமா இருக்கு என்று புலம்ப ஆரம்பித்தாள்.

நீங்களும் என்னடாநு யோசிக்கறது புரிகிறது.


 நம்ம மதத்தில் இல்லாத எதைத் தேடி ..ஏன் அங்கே போகணும் ..இப்படி பல கேள்விகள் எழலாம்.

என்னைப் பொறுத்தவரை..என்றுமே வந்த வழி, வழிபட்ட தெய்வங்கள் என்றுமே என் துணை..

இந்த Buddhism என்பது எனக்கு philosophy of life புரிய வைத்தது. அதுவும் நான் வணங்கும் எல்லாத் தெய்வங்களின் செயல்தான் என்னை இந்த புத்த மதம் இழுத்ததற்கும் காரணமோ என்று நினைப்பேன்.


எந்த ஒரு பூஜையும் புனஸ்காரமும் நிறுத்தவில்லை. என்னைச் சுற்றி எப்போதும் ஒரு பாதுகாப்பு வளையம் உணர்கிறேன். 


ஒவ்வொரு நாளும் ஒரு புத்துணர்ச்சி யுடன் தொடக்கம். 


what is the purpose of life? வேறென்ன..மகிழ்ச்சியான வாழ்க்கை..

அது எப்போது கிடைக்கும்? 


inner transformation is the key to human revolution என்று ஒவ்வொரு நாளும் என் சொல்,செயல்,எண்ணம் fine tune செய்கிறேன். 

கெஞ்சி கூத்தாடி இதைத் தா அதைத் தா என்று கேட்டது போக..win or lose ,i determine to fight till the my last breathe என்ற மன உறுதி தருகிறது இந்த philosophy. 


why me ? என்ற எண்ணம் போய்  try me என்ற எனர்ஜி.


குழப்பம்,கோபம் எல்லாம் இருந்தாலும் உடனே வெளியே வரச் செய்யும் என்னுடைய இந்த Nichiren Daishonin Buddhism practice.


lotus sutra வின் சாராம்சங்கள் படிக்க படிக்க மனம் லேசாக..

இப்போது முன்னை விட எல்லாவாற்றிலும் சிரத்தையாக ..பக்தியும் பூஜையும் அதிகமாக ..

வாழ்க்கை ஒட்டம்.


உலகம் பூராவும் ஒரு extended family எனக்கு.

No comments: