Thursday, June 17, 2021

Madhyamar-ஒரு_அலர்ட்_பதிவு

 #பொது

#ஒரு_அலர்ட்_பதிவு


smoking மட்டுமல்ல  erratic  sleeping ம் கூட injurious to health தான்.

அதை விட..எதுவுமே செய்யாமல் நமக்கென்ன என்று வாழ்க்கை நடத்துவதும் injurious to health தான்.


எனக்கு மிகவும் நெருங்கிய ஒரு குஜராத்தி குடும்பம். uncle ம் Aunty ம் இங்கே செட்டில் ஆகிவிட்டார்கள். ஒரே பெண் US ல்.

குடும்பத்தலைவரான போதும் சரியாக ஒரு வேலைக்கும் போனதில்லை. அப்படியே போனாலும் நிலைப்பதில்லை.

நல்ல chain smoker. ரொம்ப கோவக்காரர்..

ஆனா..நல்ல மனுஷர் தான்.


aunty தான் ஸ்கூலில் வேலை பார்த்து.. 60+ லும் ட்யூஷன் எடுத்து ஜீவனம். 

பொறுமை..பொறுமை..அப்படி ஒரு பொறுமை.


ரொம்ப லேட்டாக தூங்கும் பழக்கமுள்ளவர் எஜமானர்.

விடி காலை 3 மணிக்கு ஒரு டீ போட்டு குடித்து விட்டு தூங்கப் போனார் என்றால் 11 மணிக்கு பள்ளியெழுச்சி..3 மணிக்கு லஞ்ச். அவர் தூங்கும்போது யாரும் தப்பித் தவறி எழுப்பக் கூடாது. அவர் கத்தலுக்கு பயந்து இந்தம்மாவும் எப்போ அவரே எழுந்து வரட்டும்னு காத்திருப்பாள்..


போன வாரம்..இதே மாதிரி தான். கிச்சனில் காலி டீ கோப்பைகள் ..அவர் உள்ளே தூங்கிக் கொண்டிருக்க இந்தம்மாவும் வேலை முடிச்சு..11 மணி ஆகியும் எழுந்திருக்கலையே என்று குரல் கொடுக்க..பதிலில்லை..மீண்டும அரை மணி கழித்து ் வந்து கூப்பிட்டும் அசையாமல் இருப்பதைக் கண்டு.பக்கத்தில் போய் பார்க்க..பகீர்..அசைவில்லை.


பக்கத்து வீட்டார் துணையுடன் டாக்டரை அழைக்க..அடுத்த இடி..uncle இறந்து 6 மணி நேரம் ஆகிவிட்டது. கொஞ்சம் பார்த்திருந்தால் பிழைக்க வைத்திருக்கலாம் என்றும்

.தூக்கத்திலேயே massive attack என்றும் சொன்னபோது..

மனசு உளைச்சல் மிக அதிகமாச்சு..


சில வாழ்க்கைப்ப்பாடங்கள் கற்காமலேயே சென்று விட்டார்.

பொறுப்பே ஏற்காத வாழ்க்கை.

புகையுடன் வாழ்க்கை..

ஆணாதிக்கம் என்று கூவ நான் இதை பதியவில்லை..ஆனால் பாவம் தான்.

ஐயோ..அந்தம்மா பாவம்னு பரிதாப அலை எழுப்ப இல்லை இந்தப் பதிவு. 

தட்டி எழுப்பவே இல்லை அவரை எப்போதும்..

அவர் போக்கில் விட்டது எதில் கொண்டு போய் விட்டது?


என்ன சாதித்தார் இப்படி இருந்து என்று உறவினர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அங்கே வந்த ஆண்ட்டி..' நான் உனக்கு செலவு வைக்காமல் செத்துப் போய்டுவேன்.கவலைப் படாதே' என்று அடிக்கடி சொல்வாராம். அதை மட்டும் கடவுள் அவருக்கு தந்து விட்டார் என்று அழ ஆரம்பித்துவிட்டார்..

அடுத்து..

அவர் ஒரே மகள்.." நான் தான் அவருக்கு கடைசி மரியாதை செய்வேன். வேறு யாரும் வந்து செய்ய வேண்டாம்' என்று அப்பாவுக்கு ஈமக் கிரியை செய்தாள். 

எண்ணங்களின் மாற்றம்.மனதுக்கு நிறைவைத் தந்தது.


அவரின் இந்த சிகரெட் பழக்கமும்  மிகத் தவறான sleeping pattern ம்..ஒரு உத்வேகம் இல்லாத வாழ்க்கையும்.. விழிக்காமலேயே ஒரு வாழ்க்கை முற்றுபெற்றது..சரியா?


் கடைசி மூச்சு வரை கடமையைச் செய்வோம்.் குடும்பம் என்ற அழகான கூட்டில்..கோவம் என்னும் முள்ளை ஏன் வைத்து கஷ்டப்படணும்?

தீய பழக்கம் என்று தெரிந்தும் ..தீயில் வேகும் வரை தேவையா?

இருக்கும் நாட்கள் வரை இன்பமாய் இருக்க ..தடுத்தது முன் ஜென்ம கர்ம வினையா..

இதை எல்லாம் மீறி..

ரொம்ப கஷ்ட்டபடாத முடிவும்.

பெண்ணின் கையால் காரியமும்..

அவர் வாங்கி வந்த வரமா?

இன்னும் யோசித்தபடி இருக்கேன். விடை தெரியவில்லை

No comments: