Tuesday, June 22, 2021

குட்டிக்கதை- போதனை

 போதனை..


ஈஸிச்சேரில் படுத்தபடி மோட்டுவளையை பார்த்துண்டே அப்படி என்ன யோசனைப்பா உங்களுக்கு? கேட்டபடி வந்தான் கிட்டு. லாப்ட்டாப் பையை பவ்யமா வைத்தபடி ,'சொல்லுங்கோப்பா ..

இன்னிக்கு பொழுது எப்படி போச்சு. வாக்கிங் போனேளா? புஸ்தகம் படிச்சேளா? கொஞ்ச நேரமாவது Casio வாசிச்சேளா?அந்த பழைய பாட்டோட ஸ்வரம் printout எடுத்துக் கொடுத்தேனே.. பழகினேளா..ஈஸியா இருந்ததா? வயிறு எதுவும் தொல்லையில்லையே? மாத்திரை ஒழுங்கா போட்டுண்டேளா?

அடுக்கிக் கொண்டே போனான்..அந்தப் பக்கத்திலேர்ந்து பதிலே இல்லை.. 'என்னப்பா..என்னதான் ஆச்சு.. சொன்னாதானே தெரியும்.'.பொறுமை எல்லை மீறும் வேளையில் வாய் திறந்தார் அப்பா..' எனக்கு எதுக்கும் இன்னிக்கு மூட் இல்ல' ஒரே வரியில் கிட்டுவின் வாய் அடைத்தார்.

ஒரு வாரமா இதே கதை தான். 'அப்பா என்னாச்சு உங்களுக்கு..உன்னை விட பெரிப்பா எத்தனை பெரியவர் . ஸ்டிக் வெச்சுண்டு எல்லா எடத்துக்கும் தானே போய்ட்டு வரார். அத்தைய பாரு..எல்லா வீட்டு வேலையும் தானே செய்யறா..கீழாத்து மாமா ..மாமிக்கு எல்லா வேலையும் அவர் தான் செஞ்சு தரார். இப்படியே ஈஸி சேரில் உட்கார்ந்தா நீ டல்லா தான் இருப்பே..you should make an effort to move from the comfort zone. அப்ப்போ இந்த வேண்டாத சிந்தனையெல்லாம் வரவே வராது'. பிரசங்கம் பண்ணி முடிச்சு ஆபீஸ் வேலையைத் தொடர உள்ளே போனான் கிட்டு. 'எனக்கும் வயசாகறது டா..முன்னாடி மாதிரி ஒரு தைரியம் இல்ல' ..தொண்டைக் குழியில் நின்றது வார்த்தைகள் ..

தொடர்ந்தது அவர் மோட்டுவளைப் பயணம்..அதில் தெரிந்தது ் flash back . 'கண்ணா..ராஜா..பக்கத்தாத்து ராமுவைப் பாருடா..எப்பவுமே அவன் தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். அதோ ..அந்த முக்கு வீட்டுல முனிசிபல் ஆபீஸர் பைய்யன் என்னமா பாடறான்..படிப்பிலயும் கெட்டியாம் அவன். அதெல்லாம் வுடு உன் அண்ணாவைப் பாரு ஆத்து வேலையிலும் கூட மாட ஒத்தாசை பண்ணிண்டு எல்லா பொறுப்பையும் எடுத்துக்கறான் பாரு' .. சுகவாசியா இப்படியே இருக்க முடியாதுடா..'.. black and white  படம் ஓட..கூடவே திரண்டு வந்தது அவர் கண்ணில் நீரும்.

நடத்திய பாடங்கள் ..நமக்கே திருப்பி வருதோ..இனிமே..no மோட்டுவளை..

வேகமாக ஈஸிச் சேரை மடித்தபடி..மருமகளுக்கு குரல் கொடுத்தார்..'அம்மா..பக்கத்து கடையில் என்னமோ வாங்கணும்னு சொன்னியே..நான் போய் வாங்கிண்டு வரேன்'. விறு விறு நடையில் நடையில் அவர் செல்ல..வாயைப் பிளந்து ஆச்சரியத்தில் ' என்னண்ணா..இங்கே வாங்கோளேன் சீக்கிரம்'..அவள் குரல் .

No comments: