Wednesday, June 2, 2021

Happy birthday raja sir

 என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும் ஓட மாட்டேன்.


இது தான் நமக்கும் இளையராஜா சாருக்கும் உள்ள பந்தம்


அன்னக்கிளி பாட்டு முதன் முதலில் கேட்டபோது..ஆட்ட ஆரம்பித்த தலை இன்னும் நிற்கவில்லை..நிற்காது..

lyrics க்காக பாட்டு கேட்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய ..இசைக்கருவிகள் செவியை வருடி..சேதிகள் சொல்ல ஆரம்பித்தன..

வயலின் இசையில் வசமிழந்தேன்

தபேலாவில் தாளம் அறிந்தேன்

கோரஸ் பாடும் குரல்கள்..கொள்ளை இன்பம்

guitar .. காண்பிக்கும் சொர்க்கம்.


"ராகமென்ன..தாளமென்ன..அறிஞ்சா நான் பொறந்தேன்.."இல்லவே இல்லை..

ராகதேவன் பாடல்களின் மூலம் கற்றேன் கொஞ்சம் கொஞ்மாய் ராகங்களின் ரீங்காரம்.


புதுசு புதுசாய் அவர்.கையாளும் techniques..

 ஒரே பாட்டுக்குள் ஒராயிரம் சங்கதிகள் இருக்கும்.

எல்லாரையும் தாளம் போட வைத்து இணைத்த அவர் இசை..

தமிழ் இசை என்பது எட்டுத் திக்கும் சென்றடைந்த பொற்காலத்தின் தலைவன்..

அவர் கடைபிடிக்கும் punctuality..


காலையில் கண் விழிக்கும் போதே..' புத்தம் புது காலை பொன்னிற வேளை' பாட்டு மனசில் ஓடத் துவங்கும். தாலாட்டும் ராகத்துடுடன் என் நாள் முடியும்.

ஒரு நாளும் உனை மறவாத ரசிகர் கூட்டம் இங்கே..

எந்த வாகனத்தில் போனாலும்..வரும் கூடவே அவர் இசை தான்.

அவர் இசையால் எனக்கு கிடைத்த நட்பு வட்டங்கள் தான் எத்தனை எத்தனை..


' நன்றி சொல்லவே ..எங்கள் இசை 🎵 மன்னவா..வார்த்தை இல்லையே..


பிறந்தநாள் காணும் உன்னை..

' நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துக்கள்'

பல கூறி..

வாழ்த்தும் பல உள்ளங்களுடன் நானும் இணைகிறேன்.


"என்னோடு பாட்டு பாடுங்கள்..எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்..இசைக்கோலங்கள் தந்த ராஜ ராகத்துக்கு வாழ்த்து சொல்ல..

happy birthday raaja sir

No comments: