Thursday, June 17, 2021

Madhyamar-மதிப்பு (இழப்பு)

 மதிப்பு (இழப்பு)


hurricane Florence ..live ஆ இப்போது சில  சானல்களில் ஒளிப்ரப்பாகிக் கொண்டிருக்கிறது.


இரண்டு நாள் முன்பு இதை பத்தி நியூஸ் வர ஆரம்பித்த போது..நம்மூரு புயல் மாதிரி தான்னு ஒரு அசால்ட்டா இருந்து விட்டேன்.


அன்று நடு இரவில் மகளிடம் வந்த live update தூக்கக் கலக்கத்தில பார்த்து விட்டு இழுத்து போர்த்தி தூங்கிட்டேன்.


அடுத்த நாள் காலையில கண் முழிக்கும்போது அவளிடமிருந்து இன்னொரு செய்தி..

" நான் இங்கேயே தங்கிடவா..இல்ல கிளம்பி வேறெ எங்கியாவது போகவா'?


இப்போதான் கொஞ்சம் சொர்ருனு மண்டைக்கு ஏற.கூகுள் ஆண்டவரின் உதவி நாடிய போது தீவிரம் புரிந்தது.

கொஞ்ச நேரத்தில் பெண்ணே வந்தாள் வாட்சப்பில்.'

 அம்மா....இரண்டு முறை கடைக்கு போனேன். குடிக்க தண்ணீர் கிடைக்கலை.bread,biscuit ,fruits வாங்கி வந்துட்டோம்.

பவர் கட் ஆகும்மாம்..அதனால் வீட்ட்ல இருக்கிற சின்ன உத்தரணி ல கூட தண்ணி ரொப்பி வைச்சாச்சு..( எப்புடி நம்ம training நு collar உசத்தினேன்..இருந்தாலுல் மனசில ஒரு உதைப்பு)


என் ஃப்ரண்டஸ் எல்லாரும் almost கிளம்பிட்டா..college லேர்ந்து விடாம hurricane update  msg with precautionary warnings  வந்தபடி இருக்கு .ஆனா இப்போ டிக்கட் எல்லாம் ரொம்ப காஸ்ட்லியா இருக்கே..என்ன பண்ணட்டும்? என்றாள்.


'காசு பத்தி கவலை விடு.முதல்ல எந்த டிக்கட் கிடைக்கிறதோ அதில் கிளம்பிடு. சொல்லிட்டேன்.

அடுத்த அரை மணியில் சோக ராகம் பாடியபடி.' வாங்கிட்டேன்ம்மா..ஆனால் இத்தனை செலவு பண்ணி போகணுமா..can't i manage by myself here நு கேட்டாள்.


இயற்கை சீற்றம், இத்தனை முன்னெச்சரிக்கை அறிவிப்பு வந்தும் அந்த இடத்தை விட்டு நகர வில்லை என்றால் அது நம்மோட முட்டாள்தனம். பைசா போனால் போகட்டும். 


எப்போதும் போல கட கடநு instruction தர ஆரம்பித்தேன்.


முதல்ல முக்கியமான records கையில் எடுத்துக்கோ. 

மீதி things எல்லாம் neat aa pack பண்ணி raised stool or table ல வை.

less luggage ..more comfort. திடீரென்று பயண ரூட்டில் மாற்றம் வந்தாலும் prepared aa இருக்கணும்..


blah..blah..blah..


நீ கிளம்பறங்கறதால..உனக்காக வாங்கி வெச்சிருக்கிற supplies ஐ..உன்னோட ஃப்ரண்ட்ஸ் இங்கேயே stay பண்ணுபவர்களுக்கு கொடுத்துட்டு கிளம்பு (ஆஹா..நானே எனக்கு ஒரு ஷொட்டு கொடுத்து கொண்டேன்)


ஒகே..மா..நான் ரெடி ஆகிட்டு கூப்பிடறேன்னு ஃபோன் கட் செய்யும் அந்த micro second ல் என்னையும் அறியாமல் வந்து விழுந்த கேள்வி..


' Indian rupees ல எவ்வளவுடா டிக்கட் விலை'. 72 rupees ஆ? 

Local flights கூட இத்தனை விலையா


ஏன் கேட்டேன்..?

எப்படி கேட்கலாம்..?

எத்தனை முரண்பாடு சில நொடியில்..என் எண்ணத்தில்..?

என்னைப் பத்தி என்னை நினைச்சிருப்பாள்?

உடனே ஃபோன் செய்து sorry கேட்க..

அம்மா..இப்படி நீ கேட்டால் தான் நீ நார்மல் என்று அர்த்தம். chill maa ..எப்போதும் போல் அவள்.


நம் மூளையில் எண்ண முடியாத அளவு விஷயங்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன.

நாம் நல்லவராக இருக்கும் அந்த நொடியிலேயே..வேறொரு கோபமோ..பொறாமையோ, கற்றலோ,அனுபவமோ பற்றிய சிந்தனையும் செயலும் ஓடிக் கொண்டே தான் இருக்கு.

ஒரு குழந்தையை அதட்டும் அதே நொடியில்..இனிமெ செய்யாதே ..சமத்து இல்ல என்று வாரி அணைத்து கொஞ்சுகிறோம்.

மனித இயல்பு அதுதான்.


ஃப்ரண்ட்ஸ் வீட்டில் பத்திரமாக இப்போது.

என் மனதுக்குள் தோன்றியது.." இந்த மனசு இருக்கே'!??


this is in other words called " mutual possession of worlds'

No comments: