Thursday, June 17, 2021

Madhyamar-காரும் கசந்ததையா

 #சிரிப்பாசிரிப்போம்


' காரும் கசந்ததையா..வர வர காரும் கசந்ததையா'..


வாசல் திண்ணையை தேச்சபடி உட்கார்ந்திருந்த ஒரு ரம்மியமான சாயங்கால வேளை..

விளையாடிண்டு இருந்த பெண் ..' அம்மா.கார்..அம்மா கார்'னு என் கையை பிடிச்சு இழுத்து காண்பிச்சா..

ரொம்ப மெதுவா ஒரு அம்மா கை நடுங்க ஒட்டிண்டு..கார் தலை மேல ஒரு போர்ட்.' ராதிகா ட்ரைவிங் ஸ்கூல்'

மனசில ஒரு பல்பு..எத்தனை நாள் இந்த ஸ்கூட்டியில 8 போட்டு பல பேருக்கு ஏழரையா இருந்தாச்சு..இப்போ நாலு சக்கரத்துக்கு ப்ரமோஷன் ஆகலாமா..


ஒரு சுபயோக தினத்தில் டிரைவிங் ஸ்கூல்ல முள்ளங்கி ்பத்தையாட்டம் 1500 பணமும் கட்டியாச்சு.

' வாங்க மேடம்..என்று கார் கதவை திறக்க..மனசு அப்படியே பறக்க ஆரம்பிச்சது. சீட்ல உட்கார்ந்ததுமே அந்த இன்ஸ்ட்ரக்டரை பார்த்து ' சார் எனக்கு வருமா இதெல்லாம் ' நு சிந்து பைரவி சுலக்‌ஷணா ஸ்டைலில் கேட்ட் மாத்திரம்..'மேடம்..பாருங்க நீங்க வேணா..ஒரு கார் என்ன..நாலு கார்  ஓட்டுவீங்க' என்று வீர சபதம் எடுத்தார்.


உட்கார்ந்ததும் பார்த்தா அங்கே குட்டி பிள்ளையார் ஒட்டிண்டு உட்கார்ந்திருக்க..அனுமார் சஞ்சீவினி மலையைத் தூக்கிண்டு ஊஞ்சலாட..சீரியல் லைட்டில் சீனிவாச பெருமாளும் தாயாரும் அருள் பாலிக்க..'கஜானனம் பூத ஆரம்பிச்சு காக்க காக்க கனகவேல் காக்க சொல்லி அஸாத்ய சாதகஸ் ஸ்வாமின் சொல்லி பைரவரையும் மதுரை வீரா..கருப்பானு நான் சொல்லிண்டே போக..'மேடம்...அரை மணி முடிஞ்சுடிச்சு..இன்னும் அரை மணி நேரம் தான் உங்களுக்கு . 

இப்போ basics ஆரம்பிக்கலாமா?

வேகமா நான் தலையாட்ட 

' முதல்ல  அந்த கண்ணாடியைக் கொஞ்சம் சரி பண்ணுங்க..சரியா view கிடைக்கும்"

 ஓ..ஓகே சார்னு சொல்லிட்டு ...என் கண்ணாடியை சரி பண்ணியபடி.. ம்ம்ம்..எனக்கு view சரியா தெரியறதே'.. நான் சொல்ல..சொல்ல.." மேடம்..உங்க கண்ணாடியைச் சொல்லலை..அந்த rear view mirror ஐ சொன்னேன்..அவர் அந்த கண்ணாடியை முன்னாடி காண்பிச்சதும்..உடனே ' ஓ என் பொட்டு கொஞ்சம் ஓரமா போயிருக்கே..இருப்பா சரி பண்ணிடறேன்'..

கடுப்பில் கொந்தளித்த கார் டீச்சர்..' மேடம் ..'இது கதக்..இது குச்சிப்புடி'ங்கற ஸ்டைல இது க்ளட்சு, இது ஆக்ஸ்லேட்டர் , இது ப்ரேக்குனு சொல்ல ஆரம்பிச்சார். 

ஐயோ ஆண்டவா..என்கிட்ட இருப்பதோ ரெண்டே கால்..இந்த மூணுல எப்படி காலை வைக்கிறதுனு அவரை பாவமா பார்த்தேன். 'இருங்க இது காலுக்கு..இப்போ நீங்க இந்த கையும் இப்படி இப்படி சுத்தணும்நு அது பேரு என்ன..ஆங்..அந்த ஸ்டியரிங்கை காட்ட.(இது என்னடா இந்த அகிலாவுக்கு வந்த சோதனை.' கற்பூரம் காண்பிச்சிண்டே மணியும் அடிங்கற' மாதிரி ஏதோ சொல்றாரேனு பயத்தில் நான்.)


ஐயோ..இது என்ன சேவை நாழி மாதிரி இருக்கு..இதை ஃபுல்லா சுத்தணுமா..கேட்டுண்டே எதேச்சையாக வலது காலை அழுத்த ..வண்டி வேகம் எடுத்து டிஸ்கோ டான்ஸ் ஆட ஆரம்பிச்சது..

'மேடம்..மேடம்..லேசா அந்த ஸ்டியரிங்கை லெஃப்டல ஒடைங்க..

'ஒடைக்கணுமா'..ஐயோ என்கிட்ட சுத்தியல் இல்லையேனு மை.வா புலம்ப..பின்னாடி உயிருக்கு பயந்து நெருக்கி உட்கார்ந்துண்டு இருந்த மத்த ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் உயிருக்கு பயந்து கதவை திறந்து இறங்கி ஓட ஆரம்பிச்சுட்டாங்க.

.வெயிட்டெல்லாம் குறைஞ்ச வண்டி ..சல்லுனு காத்து மாதிரி சைடில் வெட்டியிருந்த பாதாள சாக்கடை நோக்கி வேகமா படையெடுக்க..

'.ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருதுனு என்னைப் பார்த்து கிண்டலடிச்சபடி ஒரு விடலைப் பைய்யன் எதிரே வர..

கார் டீச்சர்..' ப்ரேக் ப்ரேக்னு கத்தி அவர் கால்ல இருக்க்ற ப்ரேக்கை அழுத்த முயற்சிக்க..நான் சும்மா இல்லாமல் இன்னும் வேகமா ஆக்ஸ்லேட்டரை அழுத்த..

பைய்யன் பயத்தில் கீழே விழுந்துட்டான்.


தன்னிச்சையா என் கை சேவை நாழியை அதான் ஸ்டியரிங்கை ஒரு திருப்பு திருப்பி டங்குனு ட்ரைவிங் ஸ்கூல் சுவற்றில்  மோதி..குத்துயிரும் கொலையுயிருமா கார் நிற்க...

நான் பக்கத்தில் கதி கலங்கி போய் உட்கார்ந்திருந்த இன்ஸ்ட்ரக்டரிடம்..

' சார்..இடிச்சுடுச்சு' நு 'ஆண்பாவம்' படத்தில பாண்டியராஜன் டையலாக் சொல்ல

அப்புறமென்ன..எனக்கு சொல்லித்தரவே பல ஓட்டைக் கார்கள் முதலாளி வாங்க ஆரம்பிச்சார்.

அவர் வாக்கு பலித்தது..' ஒண்ணு என்னங்க..நாலு காரு ஓட்டுவீங்கனு' அவர் சொன்ன வாக்கு அவருக்கே பலிச்சது.

நான் வரேன்னு சொன்னதுமே கடையை மூடிண்டு RTO office க்கு போறேன்னு ஜகா வாங்கிடுவாங்க.


அப்படியும் விடாக் கண்டணாய்..கொஞ்சம் ஓட்ட கத்துண்டாச்சு. என் ஸ்கூட்டி நான் அதை வெளியேவே அழைச்சிண்டு போறதில்லைனு ஒரே துக்கமாகிடுத்து.


ஆனா பாவம்..என்னால நிறைய பேருக்கு வேலை போச்சு..முதலாளிக்கு நஷ்டம் வேற..ஏன்னா..நான் கத்துக்கற ட்ரிப்ல யாரும் உயிரைப் பணயம் வெச்சு வரத் தயாராக இல்ல..எனக்கே எனக்கு மட்டும் காசு வாங்கின தோஷத்துக்கு கார் சொல்லிக் கொடுத்த அந்த எந்தரோ மஹானுபாவர்.


இந்த கத்துக்குட்டி , காட்டில் இருந்த போதெல்லாம் கார் ஓட்டினேன். ஆனால் இப்போது ந(ர)கர வாழ்க்கை.

நமக்கு கார் ஓட்டணும்னா ரோடெல்லாம் காலியா இருக்கணும்..நடக்குமா இந்த பெங்களூர்ல..

அதான் என் செல்ல ஸ்கூட்டியோட ..' 'உன்னை விட மாட்டேன்..காரும் இனி வேண்டேன்' நு பவதாரிணி குரல்ல பாடிண்டு நானும் என் உடன் பிறவா பெப்போடு(pep)..நாளும் நகர்வலம் தான்.

No comments: