Thursday, June 17, 2021

Madhyamar-படம்_பார்த்து_கதை

 #படம்_பார்த்து_கதை

#பதிவு_2

#வாலிபங்கள்_ஓடும்...


"பாட்டி இன்னுமா ரெடியாகலை நீங்க..? தாத்தா ..எப்படி சூப்பர் ஸ்மார்ட்டா வந்து உட்கார்ந்துண்டு இருக்கார் பாருங்க..'..

பேத்தி சுஜி குரல் கொடுக்க..


"இதெல்லாம் இப்போ எங்களுக்கு தேவையா..காடு வா..வாங்கறது ..வீடு போ போ போங்கறது..:

பாட்டி சொல்லவும்..


" குழந்தை ஆசைப்படறா..அவ பிறந்தநாள் அதுவுமா..அவ மனசு நோகடிக்காதே.. ஆச்சு..இன்னும் இரண்டு மாசத்தில் மேல் படிப்புக்கு கிளம்பிப் போய்டுவா'..


பாட்டி எங்கியாவது ப்ரோக்ராமை கேன்ஸல் செய்து விடுவாளோனு பயத்தில் ..தாத்தா பேசிக் கொண்டிருந்தார்..


அந்தப் பெரிய வீட்டில் மகனும் மருமகளும் இருந்தாலும்..பேத்தி ஹாஸ்ட்டலில் இருந்து வந்ததுமே வீடே கலகலப்பாகிடும்.


எப்போதும் அவரவர் அறையில் வாசம்..கொஞ்சம் சலிப்பாகத் தான் இருக்கும் தாத்தாவுக்கு.


"இவர்கள் ரெண்டு பேரும் பேசிக்கறதே இல்லையே...தாத்தா மொபைலுடனும்,பாட்டி சீரியலுடனும் இப்படி பொழுதைக் கழிக்கிறாங்களே.."..

யோசித்ததன் விளைவு தான்..இந்த அவுட்டிங்..


ஆச்சு..பாட்டி..செம்ம க்யூட்டா ..அந்தக் கால ராணி போல எளிமையா அழகா ட்ரெஸ் பண்ணி ரெடியாகி வந்தாள்.


" ஆஹா..இது எனக்கு புடிச்ச பிங்க் கலர் டாப்ஸ் ஆச்சே..அடடே..அந்த ப்ரேஸ்லெட், கடிகாரம்....கொஞ்சம் கொசு வர்த்தி தாத்தா மனசில் சுத்த..

காரில் ஏறினவர்களை ஆசையாகப் பார்த்தாள் சுஜி.


தாத்தாவும் பாட்டியும் முதன்முதல்ல மீட் பண்ண அந்த ஃபோர்ட்டுக்குள் அழைத்துச் சென்றாள்..

" ஒரு ரவுண்டு சுத்திட்டு வரலாம் வாங்க'..

சுஜி சொல்ல..

" காலு...' இழுத்தாள் பாட்டி.

"அதெல்லாம் நான் உன்னை பிடிச்சு கூட்டிண்டு போறேன்..நீ வா.."

தாத்தாவின் உற்சாகம்..

அடடா..பார்க்கவே ரம்மியமாக இருந்தது.


ஒவ்வொரு தூணிலும் நின்று..ஆயிரம் கதைகளை..கண்ணால் பேசிக் கொண்டார்கள்.


ரொம்ப நாள் கழிச்சு அவர்கள் இப்படி சிரித்துப் பேசுவதை தன் காமிராவுக்குள் ரொப்பித் தள்ளினாள்.. சுஜி.


சுஜி ஊருக்கு கிளம்பி விட்டாள். 

காலேஜ்,படிப்பு, மற்ற வேலைகள்..

அப்படி மூழ்கிய நேரம்..


கண்ணில் பட்டது..அந்த போட்டி விளம்பரம்..

ஒரு பெரிய புகைப்பட நிறுவனம் நடத்தும் போட்டி..

" வயோதிகத்தில் வாலிபம்' ..இந்தத் தலைப்பில் புகைப்படம் அனுப்புமாறு இருந்தது..


தன் புகைப்பட கலெக்‌ஷனில் அவளுக்கு மிகவும் பிடித்த இந்த 

 வெட்க முகப் பாட்டியும்..வாலிபம் திரும்பிய தாத்தாவின்  ஃபோட்டோ..

 அனுப்பினாள்..

 

. சர்வதேச அளவில் முதல் 🎁 பரிசு பெற்றது அவள் புகைப்படம்.


அந்தப் படத்துக்கு பலர் கதை எழுதினார்கள்..கவிதை எழுதினார்கள்..


ஃபோனில் சொன்னபோது தாத்தா..பாட்டிக்கு அப்படி ஒரு சந்தோஷம்.


ஒரு வருடம் வேகமாக ஓடியது

லீவுக்கு ஊருக்கு வந்தாள். 


வீட்டில்..இப்போது.. அவளை வரவேற்றது

பாட்டி தாத்தாவின்  ஃபோட்டோ மட்டுமே..

 


ஃபோட்டோவிலிருந்து அவர்கள் சொன்ன..' தேங்க்ஸ்" இவளுக்கு மட்டும்  கேட்டது.


அழத் தொடங்கினாள்..சுஜி

No comments: