Thursday, June 17, 2021

பத்து வரிக் கதை

 #பத்து_வரிக்_கதை.


என்ன மத்யமர் நட்புகளே..

Popular ஆக்குவோமா..நம்ம bala hariன்

பத்து வரிக் கதை..


 எடுத்து நாம் விடலாம் நம் கதையை தோழா..தோழி.


என் கதை

#வலி


சார்..இந்த மாதிரி வீடு இந்த ஏரியாவிலேயே உங்களுக்கு கிடைக்காது.

வீட்டை சுற்றிக் காண்பித்த படி பேசினார்  சுந்தரம்..


தண்ணீ..கஷ்டமே கிடையாது பாருங்க..லைட் போடாமலே ரூம்ல எத்தனை வெளிச்சம்..


இந்த கொய்யா மரம் என் பொண்ணு ஆசையா நட்டது.ஒரு விதை கூட இருக்காது..அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும். பூச்செடியெல்லாம் என் வூட்டுக்காரி பார்த்து பார்த்து வளர்த்தது.பூஜைக்கு வெளியே பூவே வாங்க வேணாம் நீங்க..


பக்கத்து வீடெல்லாம் ரொம்ப நல்ல மனுஷங்க..எதுனாலும் ஓடி வந்துடுவாங்க..


தனி வீடா இருந்தாலும் திருட்டு பயமே கிடையாது இந்த இடத்தில..


வாசல்ல் வந்து இப்படி ஊஞ்சல்ல உட்கார்ந்தால் எப்படி காத்து பாருங்க..இந்தக் காலனில மட்டும்தான் எல்லா வீட்டு வாசல்லயும் மரம் நட்டு இருக்கும்.


கடையெல்லாம் பக்கத்திலேயே இருக்கு..நீங்க ஃபோன் பண்ணினால் கூட வந்து சாமான் கொடுத்துடுவாங்க..


வாடகை எல்லாம் பார்க்காதீங்க..ரொம்ப ரொம்ப ராசியான வீடு சார் இது..

சொல்லும்போதே சுந்தரம் கண்ணில் கண்ணீர்.


இந்த வீட்டுக்கு நிறைய டிமாண்டு சார்..

நல்ல வேளை உங்களுக்கு நல்ல நேரம்..

இந்தாங்க புடிங்க சாவி..


வாடகை வீடானாலும் தான் வாழ்ந்த வீட்டை விட்டு செல்லும் வலியுடன் விடை பெற்றார் சுந்தரம்

No comments: