Thursday, June 17, 2021

Madhyamar- akshaya tritiyai

 #what's_your plan பரம்பொருளே..


காலையில் கண் விழிக்கும்போதே என் தோழியிடமிருந்து வாட்ஸப்பில் மெசேஜ் ' திவ்யா  hospitalised. blood transfusion is going to be done please pray..please'.


தொண்டைக்குள் ஒரு பந்து வந்து அடைத்தது.


திவ்யா..என் தோழியின் 30 வயது பெண்.

சில மாதங்களுக்கு முன்பாக கேன்சரில் ஒரு வகை தாக்கியிருப்பது தெரிய வர..

உடல் ,மனம்..எல்லா வகையிலும் போராட்டம் ஆரம்பம்.


" அம்மா ஏன் என்கூட விளையாட வர மாட்டேங்கிறாள்' என்று அழதும்,சோர்ந்தும் போகும் சின்ன பெண் குழந்தை.

எந்த வேலை செய்யப் போனாலும் மனசு பூரா அந்தப் பெண்ணின் நினைவும் ப்ரார்த்தனையும்..


கொஞ்ச நேரத்தில் என் மிக நெருங்கிய உறவினர் ஒருவரிடமிருந்து ஃபோன்.

விசும்பல் சத்தம் மட்டும் அந்த முனையிலிருந்து..

' நான் இன்னும் எதுக்காக உயிரோட இருக்கேன்?'..

பதில் பேசவொ..ஆறுதல் வார்த்தை சொல்லவோ எனக்கு மனசில் தைரியமில்லை..


சில காலமாகவே ஏதோ ஒரு உடம்பு படுத்திக் கொண்டே இருக்கிறது அவர்களுக்கு..

sugar ஜாஸ்தி,கிரியாட்டினைன் ஏணி வைத்து ஏற்ற்ம், கொலஸ்ட்ராலோ கொள்ளையாய், இரத்த அழுத்தம் இஷ்டம்போல் ஏற்ற இறக்கத்தில்..

இப்போது கிட்னியும் வேலை செய்வதைக் குறைக்க..

ஒரு காலத்தில் ஓட்டமும் நடையுமாய் ஊர் பட்ட வேலை செய்த உடம்பும் காலும் இப்போது..ஒத்துழைக்க மறுக்க..


அடுத்தடுத்து வந்த செய்திகள்.." எப்படியாவது என் மகளுக்கு உயிர் பிச்சை கொடு ' என்று வேண்டும் ஒரு தாய்.

' வாழ்ந்தது போதும்..வழி காண்பியேன் உன்னை அடைய ' என்று அல்லல் படும் ஒரு உயிர்.


'அவரவர் கர்மா ' என்று ஒரு வார்த்தை ..எல்லாரும் சொல்லக் கேட்கிறோம்.


இந்த அக்ஷயத் திருதியை நாளில் எதுக்கு இப்படி ஒரு பதிவு என்று நினைக்கலாம்.

எது கேட்டாலும் நடக்குமாமே இன்று?

அதுதான்..


மனசு சந்தோஷம் என்றாலும் மத்யமர் ..

கஷ்டம் என்றாலும் ஷேர் பண்ண மத்யமர்.


நகையோடு நோயாற்ற வாழ்வும் பெற..வேண்டுவோம் இந்த நாளில்..


'

No comments: