Thursday, October 5, 2023

Madhyamar-ஒட்டி..#எட்டி

 #sunday topic

#ஒட்டி..#எட்டி 10-02-22


பாட்டியோடு ஒட்டிக் கொண்டு..அவள் புடவைத் தலைப்பில் ஒளிந்து..எட்டி பார்க்கும் குட்டிப் பெண் அகிலா கண் முன் வந்தாள்.


' வாடா கண்ணா..நான் உன் அத்தை..நான் உன் மாமி"..

இப்படி உறவுகள் கை நீட்ட..


ஒரு கையை பாட்டியின் கையோடு இணைத்து..

மறுகையை மட்டும் நீட்டிய குட்டிப் பெண்..


"ஒட்ட மாட்டோளோ எங்க கிட்ட எல்லாம்.."..

வந்தவர்கள் சொன்னதுமே..

வருந்துவாள் பாட்டி.


" ரெண்டு நாள் எங்களோட அனுப்புங்கோ..அவளும் பழகுவா"..அங்கே குழந்தைகள் நிறைய இருக்கா..

பையில் துணி அடுக்கப்படும்.


அங்கே போய் இறங்கினதும் கொஞ்சம் கொஞ்சமாக புரியும்..

ஏற்கனவே அங்கே gang form ஆகி இருப்பது..

"இவளையும் சேர்த்துக்கோங்கோ..விளையாட்டுக்கு'...

ஆணை பிறப்பித்து அடுக்களைக்குள் போவாள் அத்தை..


பந்து பொறுக்கி போடவும்..செருப்பை பார்த்துக்கவும் எப்பவுமே புதுசா சேருபவருக்கு ட்யூட்டி தானே..


அவர்களாலும் ..திடீர்னு குதித்த என்னோட ஒட்ட முடியாது.

நான் ஒட்ட நினைத்தாலும்..எதோ அவர்கள் குழுமத்தை பிரிக்க வந்தது போல எட்டி ஓடுவார்கள்..


இது ஒரு சைக்காலஜி. நம்ம டீம் லேர்ந்து எங்கியாவது அணி மாற்றம் நடந்துடுமோனு ஒரு கவலை.


கடைசியில்..

அவ ஒத்தையோனோடி..

அதான் அப்படி இருக்கா".

அத்தையின் மாமியார் ...என் பிஞ்சு காது பட சொல்லுவாள்.

அத்தை என் சப்போர்ட்டுக்கு வருவாள்.


என் காலத்தில் ஆரம்பிச்சாச்சு nuclear family. 

Very clear families.

நீ செளக்கியமா..நான் செளக்கியமா?அந்த லெவலுக்கு கொஞ்சம் மேலே..கூடிக் குலாவுவோம்


பண்டிகையா..நல்லதா கெட்டதா ..

ஒண்ணா கூடுவோம். கொண்டாடுவோம்.

அப்புறம் ..அவரவர் கூடு தேடி பறந்து விடும் நிலைதான்.


ஒட்டி ..பின் எட்டிச் சென்ற ஒரு சந்ததி கண்டேன்.


ஒட்டி..ஒட்டியே மட்டும் இருக்கும் என் பெற்றோரின் உடன்பிறப்புகளின் பிணைப்பு கண்டேன்.


எட்டி..எட்டி செல்பவர் கண்டேன்


ஒட்டி..எட்டி..பின் ..ஒட்டிக் கொள்பவர் கண்டேன்.


ஒட்டி வாழ்ந்து ஒற்றுமையைக் காட்டியது ஒரு சந்ததி என்றால்..


எட்டி வாழ்ந்தும் ..

ஒற்றுமையைக் காக்க முனைவது இந்த சந்ததி.


"எனக்குப் பிறகு ..உனக்கு யாராவது வேணுமே.."

அந்த எண்ணம் தானோ.

நம்மை இன்னும் பிணைப்பில் இருக்கச் செய்கிறது .


ஒட்டி வாழ்ந்த அந்தக் காலத்தில் ..ஒரு dependency இருந்தது. அது சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


For example..

அஞ்சு விரலும் ஒன்றில்லையே..

Economic constraints in a way helped them not to cut the chain of relationships.


ஆனால்..இப்போ..

"In" dependence'...இல்லா வாழ்க்கைத் தரம் உயர..


கற்றுக் கொண்டோம்...

ஒட்டி இருந்துதான் இருக்கணும் என்றில்லை..


எட்டி இருந்தாலும்..

' உனக்கு நானிருக்கேனு".. ஒரு ஒடி வந்து physically, mentally and psychologically தரும் support இருக்கே.

அது மலையை விடப் பெரிது.


So..

நம்ம குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தரப் போறோம்?


நாம் ஒருவரைப் பற்றி judgemental ஆக பேசுவது ..அவர்கள் மனதின் ஆழத்தில் பதிந்து விடுகிறது.


அப்புறம் ..நாம..எத்தனை தான் ஒட்டு ..ஒட்டுனு சொன்னாலும்.

எட்டி எகிறி குதித்து ஓடிடுவாங்க.


காட்டிக் கொடுப்போம் ..in a positive way ..how relationships are built and maintained.


எனக்கு ஒட்டி இருப்பதுதான் பிடிக்கும் என்றாலும்..

என் எதிர் நிற்பவரின் மனதைப் படிப்பேன்.💪💪


Bulb ஒண்ணு எரியும்.💡💡


பாதை தெரியும்..

ஒட்டணுமா?..எட்டி ஓடணுமா? என்று.😃😃


Many times..

நம்மளோட முடிவுகள் எடுக்க..

..எதிராளியின் reaction அதிகளவு உதவி செய்யும் என்று நம்புபவள் நான்.


வாழ்க்கையே ஒரு விளையாட்டுத் திடல் தானே..

பாத்திரம் பல ஏற்கும்போது

Escape ஆ..?

Sellotape ஆ..?

சொல்லிக் கொடுக்கப்படும் தானே???

No comments: