#Midweek_topic 18-01-22
#ஆன்மிக_குரு_அவசியமா?
( என் மனதில் பட்டதை எழுதி இருக்கேன். தவறிருந்தால் மன்னிக்கவும்)
ஆன்மிக குரு அவசியமே..
ஆனால் அது யார் ..அவரை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதில்தான் track மாறி விடுகிறது.
சில குடும்பங்களில் வழி வழியாக வழிபடும் குரு ஆராதனை உண்டு.
Instant solution தேடும் உலகத்தில்..
Consistency in thoughts கம்மியானதால்..
எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று..ஓட்டமாய் கூட்டமாய் ஒரு வழி தேடும் நேரத்தில்..
இப்படி புற்றீசல் போல புதுப்புது ஆன்மிக குருக்கள் முளைப்பதில் ..ஆச்சரியமில்லை.
வாய்ப் புண் அடிக்கடி வருகிறது என ஒரு 'நல்ல" டாக்டர் கிட்ட போனால்..வேரான உன் வயிற்றில் தான் பிரச்சனை என்று treatment ஆரம்பித்து....
நமக்கு முழு வலி நிவாரணம் அளிக்க உதவுவார்.
மேலோட்டமாக பார்த்துவிட்டு..
கட்டுக்கட்டாய் மருந்து எழுதி..
இதுவும் இல்லயா சர்ஜரி..
அதுவும் இல்லையா நீ பிழைக்க மாட்டாய் என்று சொன்னால்..
ஆன்மிக குரு போர்வையில் இருப்பவர்கள்..
எடுக்கும் ஆயுதம்
அந்த ..நம் பயம் ..தான்..
temporary relief மட்டுமே கிடைக்கும் .
இன்னொரு பெரிய பிரச்சினை..
இங்கேயும் peer pressure.
இவரை அடைந்தால் இனியெலாம் சுகமேனு ..
ஒவ்வொருத்தர் சொல்வதைக் கேட்டு..
வீடு நிலம் வாங்க இவர் ஸ்பெஷலிஸ்ட், கல்யாணமா..இவர்கிட்ட போங்க..
சொத்து தகராறா..சுமுகமா இவர்கிட்ட போனால் முடியும்னு..
ஒரு மெனு கார்ட் கையில்..
இன்னொரு பக்கம்..
டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போல..
என்ன ப்ராப்ளம் எடுத்துண்டு போனாலும்.. பீஸ் பீஸாகிடும்..
யோசித்து பார்த்தால்..
வரும் கஷ்டங்கள் கொடுக்கும் அழுத்தம் தான்..
கன்னா பின்னா வென்று மனசை அலைய வைக்கிறது.
ஒரு நல்ல ஆன்மிக குரு மட்டும் கிடைத்தால் போதும்..
"கஷ்டம் வருவது எல்லாம்..கர்மாவை குறைக்கத்தான்...தைரியமா..
"அவன்" நாம ஸ்மரணம் பண்ணு..
நான் இருக்கேன்னு ..கூட வருவான்னு" ..கடவுளைக் காண்பிப்பவர்...தான் ஆன்மிக குரு.
போலியையும் அசலையும் எப்படி கண்டுபிடிப்பது..உணர்வது?
மாயம் செய்து மகிழ்விப்பவர் ஒருவர்.
மாயை உலகு இது என்று நமக்கு காட்டிக் கொடுப்பவர் இவர்.
தியானமும் யோகமும் கற்றுத் தருபவர் ஒருவர்
நிதானமும் ஞானமும் தருபவர் இவர்.
படையல் என் பேரில் போடு என்பவர் ஒருவர்.
படைத்தவன் அவன் பேரைச் சொல்லு என்பவர் இவர்.
நான் கடவுள் என்பவர் ஒருவர்.
நம் எல்லார் உள்ளிலும் கிடக்கிறான் கடவுள் என்பவர் இவர்.
அடையாளம் தேடி அலைபவர் ஒருவர்.
நம் அடையாளத்தை காண வழி செய்பவர் இவர்.
காசு வைத்தால் கர்மா தொலைந்திடும் என்பவர் ஒருவர்.
உன் கர்மாவை நீயே இந்த ஜன்மத்தில் கழிக்க..நல்ல காரியம் செய் என்பவர் இவர்.
ஆன்மிக குரு ..அவரை உணரணும்..
எங்கு சென்றாலும் அவர் கண் என் மீது இருக்கு என்ற எண்ணம் மேலோங்கும்.
ஒரு பாதுகாப்பு வளையம் நம்மைச் சுற்றி இருப்பது போல உணரச் செய்பவர் ..ஒரு ஆன்மிக குரு.
அப்பா கிட்ட எதாவது சொல்லணும்னா...
முதல்ல அம்மாகிட்ட அப்ளிகேஷன் போடறோம்.
ஏன் அப்பா கிட்டயே கேட்கலாமே நேரடியா..என்று சொன்னாலும்..
அம்மா..சொல்லும்போது
weightage இன்னும் கூடும் என்று நம்புகிறோம் இல்லையா?
நம்பிக்கை ..
இந்த நம்பிக்கை தான் ....முக்கியம்.
எப்படி நம்பிக்கை வரும்?
அவர்கள்
வளைத்துப் போட்ட கூட்டத்தினால் ..வருமா?
வரவழைக்கும் மாயப் பொருளினால் வருமா?
No way..
அவர்கள்
வாழ்ந்து காட்டிய முறை..
வளர்த்த நல்ல சிந்தனைகள்.
வலைபோல பின்னிக் கிடக்கும் வாழ்க்கையை புரிந்து கொள்ள..
கை பிடித்து அழைத்துப் போகும் பாங்கு...
ஆன்மிக குரு இருப்பது அவசியமே..
அவர் கிடைத்து விட்டால்..அப்புறம்
சரணாகதி தத்துவம் தன்னால் புரியும்.
#Guidance_shopping செய்வதை நிறுத்தினாலே..பாதி டென்ஷன் குறையும் என்பது என் கருத்து.
இந்த குரு வாரத்தில் ..
அவரவர் குருவை நம்புவோம் வணங்குவோம்.
போலிகளைக் கண்டு ஏமாறோம்🙏🙏🙏

No comments:
Post a Comment