#Sunday_topic
திருமணம் பெண்ணின் வாழ்க்கையை முழுமையாக்குகிறதா?
இமை போல் குடும்பத்தை காத்தால்..முழுமை..
ஊமை மாதிரி சமயத்துக்கேறாற் போல் நடந்தால் ..முழுமை
கடமைகளை ..கடமையேனு செய்யாம இருந்தால் முழுமை.
அட..இதெல்லாம் ஒரு சுமையானு..யோசிக்காம இருந்தா ..முழுமை.
பொறுமையோடு இருந்தால் ..முழுமை..
பொறாமை தள்ளி வைத்தால்..முழுமை.
நன்மை மட்டும் நினைத்தால் முழுமை..
தீமை வருமுன் காத்தால் ..முழுமை..
நம்மை மட்டுமே யோசிக்காதது..முழுமை.
பதுமைகள்...புதுமைப் பெண்ணானால் முழுமை.
தோழமை பாராட்டினால் முழுமை.
பகைமை விரட்டினால் முழுமை.
வலிமை காட்டினால் முழுமை
வலிகளை
எளிமை வாழ்வு முழுமை.
உரிமை கோருவதும் முழுமை
தலைமை ஏற்பதும் முழுமை.
திறமையான நிர்வாகம்..முழுமை
பழமைக்கும் புதுமைக்கும் பாலம் ..முழுமை
ஒற்றுமைக்கு உழைப்பது முழுமை
நடுநிலை காப்பது முழுமை.
Honestly speaking , இப்படி பல ' "மை" கள்..மைல்கற்கள்..
..added with little pinch of " மையல்"..
திருமணத்திற்கு பின் ,பெண்ணின் வாழ்வை முழுமையாக்குவது உண்மையே..
Adventure செய்ய உதவும்...
அடடா..நானா செய்தேன்னு ..
அப்ளாஸ் நமக்கே நாம் கொடுக்க உதவும்..
That moment of self satisfaction..கண்டிப்பா திருமணத்தின் மூலம் முழுமை கிடைக்கச் செய்யும்.
' எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று..ஏதோ ..அது எதோ..உன்னிடம் இருக்கிறது..இருக்கிறதுனு.."..
கணவர் மட்டுமல்ல..
குடும்பமும் சொல்லும்போது..
கண்டிப்பா..முழுமை கிடைக்கிறது.
அம்மா கிட்ட கற்றுக் கொண்ட பாடத்தை..
Theory to practical ஆ செய்து காட்டும் போது..
முழுமை ..முழுமை..
ஆனா..அந்த முழுமை கிடைக்க..
கிடைக்கறதுக்குள்ள..
போராட்டம் தான்.
ஜெயிக்கவும்..ஜெயிக்க வைக்கவும் ..பிறந்தவர்கள் நாம் தானே..
முழுமை வாழ்வை நோக்கி..அழகான பயணம் மேற்கொள்வோம்..

No comments:
Post a Comment