#PPAP-2
#அந்தாதி_பாடல்-1
#கலங்காதே_மனமே
ஊரிலே பெரியகடை
உடையணியும் பொம்மையுமே..
பொம்மைக்கும் பெருமைதான்
பொறுத்தமான உடையாலே..
உடையவர் செல்வாரிங்கு
உடுப்புகள் வாங்கிடவே..
வாங்கியது கிழிந்தாலே
வாழ்வு வருமெனக்கு..
எனக்கும் பிடிக்குமே
புதுத்துணி வாசமுமே..
வாசனைக்கு ஏங்கியே
வாசலில் நின்றேனே..!!
நிற்காதே போவென்றே
மிரட்டலுடன் உருட்டலும்..
உருளுமே காலமிது
உரிமையாக்குவேனே இக்கடையை...💪💪💪
Akila Ramasami


No comments:
Post a Comment