#சித்திரம்_பேசுதடி..June 2022
என் கேள்விக்கென்ன பதில்.
(இந்த ஓவியத்தை ..எங்க வூட்டுக்காரர் கிட்டயும்..எங்கப்பா கிட்டயும் காண்பிச்சால் இப்படித்தான் கதை கதையா சொல்லுவாங்களோ..)
கல்யாணம் ஆகி வந்த நாளிலிருந்து இப்படித்தான்..
பல் தேய்த்து வந்ததுமே..
" "ஏங்க..காஃபியா..டீயா..ஹார்லிக்ஸா ..எது கலக்கட்டும்? '
" ஏம்மா..தினமும் இதே கேள்வியா?..சரி..இன்னிக்கு காஃபியே கொடுத்துடு..'..
ஈஸியா இருக்கும் உனக்கு..
'ம்ம்ம்ம்.. காஃபி டிகாக்ஷன் போட லேட்டாகும்.. உங்களுக்கு ஹார்லிக்ஸே சுறுக்க கலந்து கொடுத்துடறேன்..ஒகே தானே..
ஙே....
அதுக்கு எதுக்கு பின்ன option இத்தனை கொடுக்கற்மா..
கேட்க முடியுமா?..😄😄😄
இதோ இதோ..
ஹார்லிக்ஸை ஆத்திண்டே என் பக்கத்தில வரா..வரா..
அடுத்து செட் கேள்விக் கணைகள் தொடுப்பாள் பாருங்க..
' இட்லிக்கு வெங்காய சட்னியா.???
.🍅 சட்னியா.. இல்ல தக்காளி வெங்காயச் சட்னியா?
"தக்காளி வெங்காயச் சட்னியே பண்ணிடுமா.."
"அதுல அப்படியே நாலு வேர்க்கடலை போடட்டும்மா..?
"சரிம்மா..பேஷா இருக்குமே.."
" சிவப்பு மிளகாவா..பச்சை மிளகாவா?...
"காரமே இல்லாம..
அரைச்சுடு..போதும்மா..."
" சரிங்க..இந்த சட்னி ..நாளைக்கு செய்யறேன்..இன்னிக்கு மிளகாய்ப் பொடியும் தயிரும் போட்டு சாப்பிடுங்க..ஓகே தானே..
" அதுக்கு எதுக்கும்மா இத்தனை கேள்வி...கேட்டுட முடியுமா?
ஒரு வழியா ..டிஃபன் கடை முடிந்து ..சாப்பாடு ஆரம்பிக்கும் நேரம்..
' ஏங்க..ரசம் தெளிவா விடவா..கலக்கி விடவா..கலக்கித் தெளிவா விடவா..?..🤣🤣🤔
தேவுடா...நான் கலங்கி நிற்க..🤔🤔
' என் கேள்விக்கென்ன பதில்னு ..கரண்டியும் கையுமா நிற்பா..
சரிம்மா..சாயந்தரம் குழந்தையும் நீயிம் ரெடியா இருங்கோ..கடைத்தெருவுக்கு போய்ட்டு..உன்னோட பிறந்தநாளுக்கு புடவை வாங்கிண்டு வந்துடலாம்..
கடையா..கடலலையா..
அலை மோதும் கூட்டத்தில்..
குழந்தைக்கு காவலாக நான் இருக்க..
' நீ போய் ..உனக்கு பிடிச்ச ஒரு நாலு புடவை எடுத்துண்டு வாம்மா..அதுல ஒண்ணு நான் செலக்ட் செய்யறேன்னு..
அவளை உள்ளே அனுப்பிவிட..
இரண்டு மணி நேரம் கழித்து..நாலைந்து புடவையுடன் பிரசன்னமாவாள்.
' இதில் எது நல்லாயிருக்குனு சொல்லுங்க..
அந்த ப்ளூ ..டெம்ப்பிள் டிசைன் சூப்பர் மா..💪💪
' நல்லாயிருக்கா..ஆனா இப்போ தான் ஞாபகம் வரது .இதே கலர்ல ..உங்க சித்தியோட பேரன் பூணலுக்கு எனக்கு வெச்சு கொடுத்தா..இது வேணாம்ப்பா..
" உன் வலது கையில் இருக்கே ..அந்த மஸ்டர்ட் கலர் சூப்பர்மா..
" ஐயோ..இது mustard ஆ..உள்ளே வேற yellow aa தெரிஞ்சுதே..அப்ப இது வேணாம்ப்பா'..
இருப்பதோ..இன்னும் இரண்டு புடவை..
நான் என்ன செய்வேன்னு..நான் சிவாஜியாக..
" இந்த பிங்க்கே எடுத்துக்கறேன்.."..
' அம்மா..ஏகப்பட்ட பிங்க்க் இருக்கே உன்கிட்ட..'..
" இது different shade ப்பா'..🤔🤔🤔
முடிவு எடுக்கப்படும்..
என்னிக்காவது ஒரு நாள் ...
" ஏன்மா..நீயே எல்லாம் முடிவு பண்ணிட்டு என்னை ஏன் ம்மா..
எல்லாத்துலயும் consult பண்ற மாதிரி பில்டப் கொடுக்கற..
அவள் என்ன பதில் சொல்வாள்..???!!!
அதுவரை இப்படித்தான் ..நான் ..ஙேனு முழிச்சுண்டு நிப்பேன்..🤣🤣
அதுவும் ஒரு சுகம் தானுங்கோ..💪💪💪
அருமை யான ஓவியத்திற்கு நன்றி திருமதி jayalakshmi kumar mam.
இந்தப் பதிவு என் வீட்டு இரு தகப்பன்களுக்கு அர்ப்பணம்.
Happy father's day💐💐💐


No comments:
Post a Comment