#ஸண்டே_ஸ்பெஷல் (14-02-21)
#அன்பே_எங்கள_உலக_தத்துவம்
*சாப்பிட்டியா நீ என்று கேட்கும்போது காதலை விட கரிசனம் இருக்கும்.👌👌👌👌
*பசங்க ஸ்கூல்லேர்ந்து இன்னும் வரலையானு கேட்கும்போது கண்டிப்போட கவலை இருக்கும்...
*புடவை கடைக்கு கூட்டிப் போய் ' உனக்கு பிடிச்ச பத்து முதல்ல செலக்ட் பண்ணு..அதிலிருந்து ஒன்று எடுத்துக்கோ என்று வாய் சொல்லிவிட்டு பக்கத்து கவுண்டரில் தனக்கு பிடித்த கலரை நாலு தடவை உற்று பார்த்துவிட்டு..' இதை எடுத்துக்கோயேன்' என்று வாய் விட்டு சொல்லாத வாத்ஸல்யம்.
( பத்து வருஷத்துக்கு அப்பறம் தான் இந்த expression புரிஞ்சது)
*சாப்பாடு வாயில் போடும் முன்னே சூப்பரா இருக்கு என்று சொல்லும் சொக்கத் தங்கம்.
( பின்ன..அடுத்த வேளை half boiled தட்டுல விழுமே)💪💪💪💪
*நீ போய்ட்டு வா.நான் இருக்கேன் இங்கனு சைக்கிள் கேப்பிலும் சுதந்திரம் தேடும் ஜீவன்.😄😄😄😄
*மெயில் அடிச்சாலும் சரி ,மெசேஜ் செஞ்சாலும் தன் மனைவி கண்டிப்பாக பார்க்க மாட்டாள்னு தெரிஞ்சும் விடா முயற்சி விக்கிரமாதித்தர்கள்
( எத்தனை group ல இருக்கோம்..எத்தனை போஸ்ட் போடணும் நமக்கு)😄😄😄
*valentine day க்கு gift என்னன்னு கேட்டால் ..என் "wallet "மட்டுமல்ல என் " வாழ்க்கையும்' உன் கையில் தானே இருக்குனு கவி பாடும் திறமை.💕💕💕
*ஊர் வம்பு சொல்லும்போது தலையை தலையை ஆட்டி கேட்டுபுட்டு நாம கேள்வி கேக்கும்போது 'இப்ப யாரைப் பத்தி சொன்னே' என்று பல்பு கொடுக்கும் (life) partner கள்..💡💡💡💡💡
உஸ் ..அப்பா...என்னால் முடிஞ்சதை சொல்லிட்டேன்.
அன்பே எங்கள் உலக தத்துவம்..
அன்பும் புரிதலும் இருக்க..
வருடம் பூராவும் valentine day தான்..
ஆனா..நமக்கு..#வம்பிழுக்கும்_day தான் எப்போதும்..
உண்மையை சொல்லிப் போட்டேனுங்க😄😄😄
இந்த பாட்டை key board ல வாசிச்சு ..அசத்திப்புட்டாரே மனுஷன்😄😄😄

No comments:
Post a Comment